Thursday, October 9, 2014


திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோவில் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி சந்நிதி இருக்கிறது. ஆலங்குடியையும் திருச்செந்தூரையும் குரு ஸ்தலம் என்பார்கள். இங்கு சென்று தட்சிணா மூர்த்திக்கு சிறப்புப் பூஜை செய்வதோடு, மூலஸ்தானம் பக்கத்தில் (சுரங்கப்பாதை வழி) பஞ்சலிங்க தரிசனமும் செய்ய வேண்டும். கடலில் சமுத்திர ஸ்நானம் செய்வதற்கு விதிமுறை உண்டு. முதலில் நாழிக் கிணற்றில் குளித்த பிறகுதான் சமுத்திரத்தில் நீராட வேண்டும். பிறகு மீண்டும் நாழிக் கிணற்றில் குளிக்கலாம் அல்லது வெளிக் குழாயில் குளிக்கலாம்.

No comments:

Post a Comment