Thursday, October 9, 2014

குடும்ப அமைதிக்கு வெண்கடுகு




சமீபத்தில் நான் ஒரு சுவையான செய்தியைப் படித்தேன்அதைஅனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு உபாசகர் கூறிய செய்தி இது ''பல குடும்பங்களிலும் உள்ள ஓரேபிரச்சனை குடும்ப அமைதி இன்மைசகோதரசகோதரிகளிடையே மனவேறுபாடுவீட்டில் உள்ள பெண்கள் திருமணம் ஆகிய பின் கணவனுடன்சென்று வசிப்பார்கள்அது போல ஆண்கள் தன்னுடன் வசிக்க தன்மனைவியையும் அழைத்து வருவார்கள்ஒரு குடும்பத்தில் பெண்கள்வெளியே சென்று விடபுதுப் பெண் உள்ளே நுழைய பெரும்பாலும் அந்தஇரு பிரிவுப் பெண்கள் மற்றும் அவர்களுடைய குழந்தைகள் மூலமேமனஸ்தாபங்கள் தோன்றத் துவங்குகிறது


சின்ன சின்ன பிரச்சனைகளினால் ஏற்படும் மனஸ்தாபங்கள் பெரியஅளவில் எழுகிறதுஇன்னும் சில குடும்பங்களில் சகோதரசகோதரிகளுக்கு இடையேயும் மனஸ்தாபங்களும் வெளியில் தெரியாதவெறுப்பும் ஏற்படும்போது அவை அனைவரது குடும்ப வாழ்க்கை மற்றும்மன நிலையை பாதிக்க அவர்கள் அமைதி இன்றி வாழ்கிறார்கள்

பல வருடங்களாக ஒற்றுமையுடன் இருந்த நல்ல குடும்பங்களில் கூடதிடீர் என இப்படிப்பட்ட வேற்றுமை தோன்றத் துவங்குகிறதுஇதற்குமூலக் காரணமே நம் வீடுகளில் குடி புகுந்து கொள்ளும் தீய சக்திகள்தான்.தீய சக்திகளினால் எளிதில் ஆக்ரமிக்க முடிந்தவர்கள் வீட்டில் உள்ளகுழந்தைகள் மற்றும் மன வலிமையற்ற பெண்களின் மீதுதான்

வீடுகளில் சுற்றித் திரியும் அவை வீட்டில் உள்ள நல்ல ஆவிகளை அடித்துவிரட்டி விட்டு அங்குள்ள எண்ண அலைகளைஅதிர்வுகளை தாமேஆக்ரமித்துக் கொள்ளும்போது எதிர்மறையான எண்ணங்களையேவிதைத்துக் கொண்டு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும்பல்வேறு காரணங்களினால் அங்காங்கே சுற்றித்தெரியும் தீய ஆவிகள் யார் மூலமாவது வீடுகளில் புகுந்து கொண்டுமுதலில் குடும்ப ஒற்றுமையைக் குலைக்கும்வீட்டிற்குள் நுழையமுடியாத அளவில் உள்ளபோது வெளியில் இருந்தவண்ணம் அவற்றால்எதுவுமே செய்ய இயலாதுஆனால் ஒருமுறை யார் மூலமாவதுவீட்டிற்குள் நுழைந்து விட்டால் அவற்றை கண்டுபிடித்து வெளியேற்றுவதுகடினம் என்பதின் காரணம் அவை வீட்டில் உள்ளவர்களின் மன நிலையைதன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுகிறது என்பதினால்தான்

தான் தீய சக்தியாக இருப்பதினால் தான் குடி வந்துள்ள வீட்டில் வேறுயாரும் மன அமைதியுடன் இருக்கக் கூடாது என அவை நினைப்பதேஅதற்குக் காரணம்

வீட்டில் புகுந்து கொள்ளும் தீய சக்திகளை விலக்குவது கடினம் அல்ல.ஆனால் வீட்டில் அமைதி இன்மைக்குக் காரணமே தீய சக்திகள்தான்என்பது மட்டும் சத்தியமான உண்மைஒற்றுமையாக இருந்து வந்தகுடும்பங்கள் கூட சிறு சிறு பிரச்சனைகளினால் மன ஒற்றுமை இன்றிசிதறும் என்பதின் காரணம் அந்த தீய ஆவிகளின் செயல்பாடினால்தான் .

  வெண்கடுகு எனும் வெண் கணங்களின் மத்தியில் பைரவர் ஆகவேஅப்படிப்பட்ட தீய சக்திகள் வீடுகளில் புகுந்து கொள்ளும்போது அவற்றின்தீமையைக் குறைக்கும் வழி முறை என்னஅதைக் குறித்து சாயி உபாசகர்ஒருவர் கூறிய நிவாரணம் இது. ''மனதளவில் பிரிந்து உள்ள குடும்பங்கள்ஒன்று சேரவும் , குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவவும்வீட்டில்உள்ள தீய சக்திகள் வெளியேறவும் ஒரு எளிய பரிகாரம் உள்ளது

வீடுகளில் மன அமைதி இல்லாமல்குடும்ப ஒற்றுமை இல்லாமல்உள்ளவர்கள் சாம்பிராணி தூபத்தைப் போட வேண்டும்அதில் சிறிதளவுவெள்ளைக் கடுகை ( வெண்கடுகு என்பார்கள்போட்டு விட்டு வீட்டில்அனைத்து அறைகளிலும் எடுத்துச் சென்று அந்தப் புகையைக் பரவ விட்டுவந்து ஸ்வாமி அறையில் வைத்து விட வேண்டும்அதன் பின் நடப்பதைப்பாருங்கள்

வீட்டில் அந்நாள் வரை இருந்து வந்த மன அமைதி மெல்ல மெல்லஅதிகமாவதைக் காணலாம்

வெண் கடுகிற்கு அத்தனை சக்தியாஅது எதனால்அதன் காரணத்தைக்கேட்டபோது ஒரு பண்டிதர் கீழ் கண்ட காரணங்களைக் கூறினார். ''வெண்கடுகு சாமான்யமான பொருள் அல்லஅது கடவுள் தன்மையைக்கொண்டதுஅது தேவ கணம் ஆகும்

வெண் கடுகை குறித்த ஒரு கதையைப் படியுங்கள்அதன் சக்தி புரியும்.மகத நாட்டை ஆண்டு வந்த மயில்வண்ணன் என்ற மன்னன் பெரும்கொடையாளிமக்களுக்கு நிறைய நன்மைகளை செய்து வந்தான்ஆகவேஅவனது புகழ் எங்கும் பரவி இருந்ததுஅவன் மீது பொறாமைக் கொண்டவிரோதிகள் அவன் மீது தீய ஏவல்களை ஏவி விட்டார்கள்அதனால்நாளடைவில் அவனால் எதையும் சரிவர யோசனை செய்ய முடியாமல்தத்தளித்தான்அவன் குடும்பத்திலும் அமைதி குலைந்ததுஆகவே அவன்தனது ராஜ குருவை அழைத்து தன்னுடைய சங்கடங்களைக் கூறி அதற்குப்பரிகாரம் கேட்டான்ராஜகுருவும் அவனுக்கு ஒரு விசேஷ பூஜையைசெய்யுமாறு அறிவுரை செய்தார்

அதன்படி ஒரு மண்டலம் பைரவப் பெருமானுக்கு வெண்கடுகு,இலாமச்சம்வேர்சந்தனம்அறுகு என்னும் நான்கையும் கொண்டு பாதபூஜை செய்தப் பின் சாம்பிராணியை தூபத்தை ஏற்றி வைத்து அதன்தூபத்தில் வெண் கடுகைப் போட்டு வீடு முழுவதும் அந்தப் புகையைக்காட்டினால் தீய சக்திகள் ஓடிவிடும் என்றும் கூறினார்

எதற்காக பாத பூஜையிலும் சாம்பிராணிப் புகையிலும் வெண் கடுகைபயன்படுத்த வேண்டும் என்று மன்னன் கேட்க ராஜ குரு கூறினார் ' மன்னா,வெள்ளைக் கடுகுச் செடிகள் குளிர்ச்சியை தருபவைஅவை இமயமலையை சுற்றிக் காவல் புரியும் பைரவரின் தேவ கணங்கள்ஆகவேதான்அவை அதிகம் இமய மலை அடிவாரங்களில் காணப்படும்பிரபஞ்சத்தின்அனைத்து தீய சக்திகளைளையும் அடக்கி ஒடுக்கி வைத்துள்ளவர் பைரவர்ஆவார்ஆகவே வெண் கடுகு உள்ள இடத்தில் தீய சக்திகள் இருக்கமுடியாதுஅவை புகையாக மாறும்போதுஅதன் உள்ளே உள்ள தேவகணங்கள் தீய ஆவிகளை அடித்துத் துரத்தும்

சாதாரணமாக ஸூதர்சன ஹோமங்களில் ஓதப்படும் மந்திரங்களில் சர்வசத்ரு நாசன மந்திர உச்சாடனமான ஓம் க்லீம் க்ருஷ்ணாய என்றுதுவங்கும் வார்த்தைகள் வலிமை மிக்க மந்திர ஒலிகள்அதை ஓதும்போதுபகவான் விஷ்ணுவே ஸூதர்சனராக வந்து சத்ருக்களை அழிப்பார்.அப்படிப்பட்ட ஹோமத்தில் வெண்கடுகை ஸமித்து ஹோமம் செய்யும்போது சர்வ சத்ருக்களும் அவர்களுடன் சேர்ந்த தீய ஆவிகளும்அழிவார்கள்

அது போலவே போர்களில் அடிபட்டு இறக்கும் தறுவாயில் உள்ள வீரர்கள்பூமியில் கிடக்கும்போது அவர்களை சுற்றி உள்ள இடங்களில்வெண்கடுகைத் தீயிலிட்டுப் புகையை உண்டாக்கினால் யம பகவான்அவர்களின் உயிர்களை பறிக்க வர மாட்டார் என்ற நம்பிக்கை சங்ககாலங்களில் இருந்துள்ளதுஅதற்குக் காரணம் வெண்கடுகுப் புகைஸூதர்சனார் வருகை தரும் நிலையைக் குறிப்பதாகும் . ஆகவேதான்வெண் கடுகு கடவுள் தன்மை வாய்ந்ததாகக் கருதப்பட்டதுஎன்று விளக்கம்அளித்தார்

தனது ராஜ குரு கூறியதைப் போலவே மன்னன் மயில்வண்ணன் வெண்கடுகைப் போட்டு பூஜையும்யாகமும் செய்ய அனைத்து தீய ஆவிகளும்வீட்டை விட்டு வெளியேறினஅவர் குடும்பத்தில் மீண்டும் அமைதிஏற்பட்டது.

No comments:

Post a Comment