Thursday, October 9, 2014

தஞ்சை பெரிய கோவில்- நம்ப முடியாத தகவல்கள்





தஞ்சை பெரிய கோவில்

அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லைமரம் இல்லை.சொறிகல் என்ற பூராங்கல் இல்லைமொத்தமும் கருங்கல்நீலம் ஓடிய,சிவப்பு படர்ந்த கருங்கல்உயர்ந்த கிரானைட்இரண்டு கோபுரங்கள்தாண்டிவிமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் 

நீளமும்அகலமும்உயரமும் பார்க்கும்போதுவெறும் வண்டல் மண்நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தனஎதில்ஏற்றிஇறக்கினர்எப்படி இழுத்து வந்தனர்எத்தனை பேர்எத்தனை நாள்,எவர் திட்டம்என்ன கணக்கு

இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளிஎன்ன வகை இரும்புஎதுநெம்பி தூக்கியதுகயிறு உண்டாகப்பிகள் எத்தனைஇரும்பு உண்டெனில்,பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (Heat Treatment) தெரிந்திருக்கவேண்டுமேஇரும்பை சூடாக்கி எதில் முக்கினர்தண்ணீரிலா,எண்ணெயிலாநெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை, (oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டாஎத்தனை பேருக்குஎவ்வளவு சாப்பாடுஅரிசிகாய்கறி எங்கிருந்துசமையல் பாத்திரம்எத்தனைபடுத்துறங்க எங்கு வசதிமறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது.

மனிதருக்கு உதவியாய்யானைகள்மாடுகள்குதிரைகள்கழுதைகள்உண்டெனில்அதற்கு உணவும்அவற்றைப் பழக்கிஉபயோகப்படுத்துவோரும் எத்தனை பேர்அத்தனை பேரும் ஆண்கள்தானாகோவில் கட்டுவதில் பெண்களுக்கும் பங்குண்டாதரை பெருக்கி,மண் சுமந்துபளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறிவிட்டுஇரவுஆட்டம் ஆடிநாடகம் போட்டுபாட்டு பாடிஅவர்களும் தங்கள் பங்கைவழங்கியிருப்பரோஇத்தனை நடவடிக்கையில்உழைப்பாளிகளுக்குகாயம் படாதிருந்திருக்குமாஆமெனில்என்ன வைத்தியம்எத்தனைபேருக்கு எவ்வளவு வைத்தியர்இத்தனை செலவுக்கும்கணக்குவழக்கென்னபணப்பரிமாற்றம் எப்படிபொன்னாவெள்ளியா,செப்புக்காசாஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம்என்னவிதபொருளாதாரம்உணவுக்கு எண்ணெய்நெய்பால்பருப்புமாமிசம்உப்பு,துணிமணிவாசனை அணிகலன்கள் இருந்திருக்குமாபாதுகாப்பு வீரர்கள்உண்டாவேலை ஆட்களுக்குள் பிரச்னையெனில்பஞ்சாயத்து உண்டா.என்ன வகை சட்டம்எவர் நீதிபதிஇவை அத்தனையும்ஒரு தனி மனிதன்,ஒரு அரசன் நிர்வகித்தானாஅவன் பெயர் தான் அருண்மொழி என்றராஜராஜனா.
சிறந்த சிவபக்தன் மன்னன் ராஜா ராஜா சோழன்

யோசிக்க யோசிக்கமனம் மிகப் பெரிதாய் விரிவடைகிறதுஇது கோவிலா.வழிபாட்டுத் தலமாவெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா.இல்லைஇது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு.திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத்திறமைக்குகற்களால் கட்டப்பட்டத் திரைகாலம் அழிக்க முடியாதசான்றிதழ்காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு.விதவிதமான கலைகளின்மனித நுட்பத்தின் மனத் திண்மையின்ஒருமித்த சின்னம்முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல்இருவர்கட்டிப்பிடிக்க முடியாத அகலம்இதுபோல பல கற்கள்முன்பக்ககோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது.
                                                                     


திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிறநார்த்தாமலையிலிருந்து வந்திருக்கிறதுகிட்டத்தட்ட அறுபது கிலோமீட்டர்எப்படி கொண்டு வந்தனர் இவ்வளவு பெரிய கற்பாறைகளை.பல்சகடப் பெரு வண்டிகள்பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள்,மாடுகள் இழுத்தும்யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றனஅந்தவழியில் ஒரு ஆறு கூட இல்லைமலை தாண்ட வேண்டாம்மணல் பகுதிஇல்லைசரியானசமமான பாதைவழியெல்லாம் மரங்கள்அந்தநார்த்தாமலையில்ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறதுவெட்டியஇடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.

எப்படி மேலே போயிற்றுஇத்தனை உயரம்விமானம் கட்டக்கட்ட,வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர்.இரண்டு யானைகள் எதிரும்புதிருமாய் போவதற்கான அகலத்தில்கற்பலகைகள்மனிதர்களாலும்மிருகங்களாலும்மேலே அந்த சுழல்பாதையில் அனுப்பப்பட்டனஉச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது.அதாவதுகலசம் பொருத்தும்போதுவிமானம் வெறும் களிமண் குன்றாய்இருந்திருக்கும்பிறகு...? மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும்.ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றிதொலைதூரம் போய்குவித்திருக்கின்றனர்குவிக்கப்பட்ட இடம் இப்போதும் இருக்கிறது. "சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்துஎன்றுசொல்கின்றனரே... வாய்ப்பே இல்லைஅத்தனை உயரம் சாரம்.கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காதுசாத்தியமேகிடையாதுநொறுங்கி விழுந்திருக்கும்அப்படியானால் சாரப்பள்ளம்.சாரம் போடஅதாவது மண்பாதை போட மண் தோண்டப்பட்ட இடம்பள்ளமாயிற்றுசாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம்சாரப்பள்ளம்இத்தனை மனிதர்கள் எப்படிஉழைப்பாளிகள் எங்கிருந்து

வேறெதற்கு போர்பாண்டிய தேசம்சேர தேசம்இலங்கைகீழசாளுக்கியம்மேல சாளுக்கியம் என்று பரவிஎல்லா இடத்திலிருந்தும்,மனிதர்களும்மிருகங்களும்பொன்னும்மணியும்மற்ற உலோகங்களும்,அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர்.கோவில் கட்ட போராபோர் செய்து ஜெயித்ததால் கோவிலாஇரண்டும்தான்சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில்பாண்டியர்கள்மேலை சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர். (வெகு காலம்கழித்து ஜெயித்தனர்.) எனவேஎதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று,இறைபணி செய்தது போலவும் ஆயிற்றுஇது சோழ தேசத்து அரசியல்சாணக்கியம்கல் செதுக்க விதவிதமான சிற்பிகள்மேல் பகுதி நீக்க சிலர்.தூண்வெறும் பலகைஅடுக்குப்பாறை செய்ய சிலர்அளவு பார்த்து அடுக்கசிலர்கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர்உண்டுஉளிகள்நல்ல எக்கு இரும்பால் ஆனவைபெரிய கல் தொட்டியில்எண்ணெய் ஊற்றிபழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில்இறக்கஇரும்பு இறுகும்கல் செதுக்கும் கோவிலுக்குள்இப்படிப்பட்டகல்தொட்டி இன்னும் இருக்கிறதுகயிறுகம்பிகள் சிறிதளவேபயன்பட்டனஉயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.

எல்லா ஊரிலிருந்தும்தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்கவேண்டும்ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும்ஆடுகள் வளர்ப்பதுஒரு கலையாககடமையாக இருந்திருக்கிறது. "சாவா மூவா பேராடுகள்'என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. 96 ஆடுகள் இருப்பினும்,அந்த ஆட்டுக் கூட்டம் குறையாதுகுட்டி போட்டு வளரும்வளர்க்கப்படவேண்டும்நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன.விதவிதமான மருந்துப் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றனஅறுவைசிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர்மருத்துவமனை சார்ந்ததொழிலாளர்கள் உண்டுமருந்துக் கிடங்கு உண்டுமூலிகை தேடிசேகரிப்போர் உண்டுநீர் ஊற்றுபவர் உண்டுகணக்கு வழக்குகள்ஓலைச்சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றனதுல்லியமான கணக்குவைக்கப்பட்டிருக்கிறதுதானங்கள் கல்வெட்டாய்குன்றிமணி தங்கம் கூடபிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றனஇதைச் சொல்ல ஒரு ஆள்செதுக்கஒரு ஆள்நேர் பார்க்க ஒரு ஆள்வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில்,பஞ்சாயத்து நடந்ததற்கான கல்வெட்டுகள் உண்டு.

மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டுஒண்டிக்கு ஒண்டி சண்டைசெய்ய விட்டிருக்கின்றனர். (Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடிஇருவருமே இறந்ததால்இருவரின் மனக்கேதமும் தீர்க்ககோவில்விளக்கெரிக்க வேண்டியார் மனஸ்தாபத்திற்குக் காரணமோஅவர்களுக்குஅபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம்அதாவதுசாவாமூவா பேராடுகள்தஞ்சையிலுள்ள ஒரு கோவிலில் இக்கல்வெட்டுஇருக்கிறது.

கோவில் கட்டியாகி விட்டதுநிர்வகிக்க யார் யார்அவருக்கென்று வீடுஒதுக்கிவீட்டு இலக்கம் சொல்லிபெயர் எழுதிகல்வெட்டாய்வெட்டியிருக்கிறதுஇடது சிறகு மூன்றாம் வீடுநக்கன் பரமிக்கு பங்குஒன்றும்இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும்என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றனவீணை வாசிக்கும்ஆதிச்சன் இறந்தமையால்அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்றுசம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறதுகோவில் பணியில் உள்ள எல்லாதொழிலாளர்கள் பெயரும்தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றனஅதுமட்டுமல்லகோவிலுக்கு யார் தானம் தந்தனரோஅவர்கள் தந்தது சிறுதொகையானாலும்பெரிய தொகையானாலும்தங்க ஆபரணமானாலும்,கல்லில் வெட்டப்பட்டிருக்கிறதுமுதல் தானம் ராஜராஜனுடையது. "நாங்கொடுத்தனவும்நம் அக்கன் கொடுத்தனவும்நம் பெண்டுகள்கொடுத்தனவும்என்று கல்வெட்டு துவங்குகிறதுதான் மட்டும்இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்குஇல்லைகோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர்கொஞ்சம்தெரிய வருகிறது.




விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளனசட்டை அணிந்ததளபதிகள்பூணூல் அணிந்த அந்தணர்கள்இடுப்பில் பாவாடையும்மேல்போர்வையும் அணிந்த அரசிகள்இடதுபக்க பெரிய கொண்டையோடு,தாடியோடு மாமன்னர் ராஜராஜன்அலங்காரமானமிக அழகான கறுப்பு,சிவப்புமாநிறம் கொண்ட தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்டநடனமாதர்கள்சிதம்பரம் கோவில் நடராஜர்விதவிதமான முகங்கள்;ஒன்று போல் ஒன்று இல்லைஉயிர் ததும்பும் முகபாவங்கள்தட்டைஓவியங்கள்ஆனால்தெளிவாகத் தெரியும் ஒரு உலகம்மாமன்னர்ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எதுபோரா கலைஞர்கள்செய்திறனாஇல்லைபெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம்முக்கிய தூண்டுதல்கோபுர வாசலில் உள்ள சுவர்களில்சிறிய சிறியசிற்பங்கள் தெரிகின்றனகண்ணப்ப நாயனார்பூசலார்கண்டேஸ்வரர்மன்மத தகனம் என்றுமுக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கிவித்தை காட்டியிருக்கின்றனர்அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்றதாயின் உருவம்மன்னர் முகங்கள்புராண காட்சிகள் எல்லாம்கோவில்கோபுரங்களில் உண்டு.



இது என்னவித கோவில்விமானம் உயரம்மிக உயரம்கோபுரங்கள்சிறியவைஇது ஆகம விதியாபுதிய சிற்ப சாஸ்திரமாஉள்ளேநுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள்எதிரே உள்ள விமானம்தான் சிவலிங்கம்வானம் ஒரு சிவலிங்கம்விமானத்திற்குள் உள்ள வெளிஒரு சிவலிங்கம்வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம்.எல்லாம் சிவமயம்இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்தபெயர், "தென்திசை மேரு!' உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர்தமிழில்பெரு உடையார்வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல்கைலாயம்போகவில்லைகைலாயத்தை இங்கே கொண்டுவந்துவிட்ட உடையார்பெரிய உடையார்இது போதுமா கடவுளைச் சொல்லரொம்ப பெரிசு ஐயாகடவுள்கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் கட்டுகிறார்பதினேழுஅடி உயரம்அவர் கால்கதைகதையைச் சுற்றி மலைப்பாம்பு.மலைப்பாம்பு வாயில் பெரிய யானைஅதாவதுயானையை விழுங்கும்பாம்புபாம்பு சுற்றிய கதைகதையில் கால் வைத்த துவாரபாலகர்அவர்கை விஸ்மயம் என்ற முத்திரை காட்டுகிறதுஉள்ளே இருப்பதை விவரிக்கமுடியாது என்று கை விரிக்கிறதுவிவரிக்கவே முடியாத சக்திக்கு,கடவுளுக்குதன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர்ராஜராஜன்அதுவே பிரகதீஸ்வரம்அதுவும் விஸ்வரூபம்இன்றளவும்

1000 ஆண்டை முன்னிட்டு மத்திய அரசு தமிழகத்திற்க்கு பெருமைசேர்க்கும் வகையில் தஞ்சை கோயில் ராஜா ராஜா சோழன் பொறித்த 1000ரூபாய் காயின் வெளியிட்டது குறிப்பிடத்தகக்து ஆகும்.....

ராஜா ராஜா சோழன் சிவபக்தி அளவிடற்கறியது.

*கோயிற்கோபுரம்

*மூலவர்

*நந்தியம்பெருமான்

எல்லாமே பெரியது.....அளப்பறியது

No comments:

Post a Comment