Saturday, December 27, 2014

கங்கைகொண்ட சோழபுரம்

தஞ்சாவூரில் தந்தை கட்டிய கோயில் ஆண்மையின் கம்பீரம் என்றால், கங்கை கொண்ட சோழபுரத்தில் மகன் கட்டியதோ பெண்மையின் பேரழகு. அதாவது பெரிய கோயில் விமானத்தில் காணப்படாத நெளிவுகள், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் காணப்படுவது பெண்ணின் நளினத்தை நினைவூட்டுவதாக இருக்கிறது. இதன் காரணமாகவே பெரிய கோயிலைப் போன்றே கட்டப்பட்டிருந்தாலும், சோழபுரம் கோயிலைப் பார்க்கின்றபோது ஒரு பெண்ணைப் பார்ப்பதுபோன்ற புது உணர்வு உண்டாகிறது. சரி, கொஞ்சம் இந்த ஆண், பெண் விளையாட்டை ஒதுக்கிவைத்துவிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தின் பக்கங்களை கொஞ்சம் புரட்டுவோம்!!!



பெருவுடையார் கோயில் தஞ்சாவூரிலிருந்து 72 கி.மீ தொலைவில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் என்ற சிற்றூரில் பெருவுடையார் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கும் தஞ்சை பெரிய கோயிலைப் போன்றே பெருவுடையார் கோயில் என்றே பெயர் இருப்பினும், இதன் அமைவிடமான கங்கைகொண்ட சோழபுரத்தின் பெயரிலேயே பிரபலமாக அழைக்கப்படுகிறது.

கங்கைகொண்ட சோழபுரம்


 1022-ல் இராசேந்திர சோழன் இந்தியாவின் கிழக்குக் கடற்கரை முழுவதையும் வென்றதோடு கங்கையையும் வெற்றிகொண்டான். அந்த வெற்றியின் காரணமாக 'கங்கை கொண்ட சோழன்' என்ற பட்டப்பெயரும் அவனுக்கு வழங்கப்பட்டது. அதோடு அந்த மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் கங்கைகொண்ட சோழபுரம் என்ற இந்த ஊரும் நிர்மாணிக்கப்பட்டது. அதேவேளை கலைப்பொக்கிஷமான இந்த பெருவுடையார் கோயிலும் கட்டப்பட்டது.


கோயில் விமானம்


 தஞ்சை பெரிய கோயிலின் விமானம் 216 அடியுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்க, கங்கைகொண்ட சோழபுரம் கோயில் விமானத்தின் உயரமோ 160 அடியே ஆகும். அதேபோன்று 13 நிலைகள் கொண்ட பெரிய கோயில் விமானத்தோடு ஒப்பிடுகையில் சோழபுரம் கோயில் விமானத்தில் 8 நிலைகளே உள்ளன. ஆனால் நம் உள்ளங்களை கவரும் கவின் கொஞ்சும் வளைவுகள் சோழபுரம் கோயில் விமானத்தில் காணப்படுவதால், அதற்கு ஒரு பெண்ணியல்பை இவைத் தருகின்றன.


கோட்டையும், கோயிலும்! 

கங்கைகொண்ட சோழபுரம் கோயில் ஒருகாலத்தில் கோயிலாக மட்டுமில்லாமல் சிறந்த கோட்டையாகவும் விளங்கியிருக்கிறது. இப்போதும் கோயிலின் தென்மேற்கு மூலையில் பெரியதொரு அரணும், மேற்கே சிறிய அரண் ஒன்றும் உள்ளது.






மண்டபம் 


340 அடி நீளமும், 100 அடி அகலமும் கொண்டுள்ள இக்கோயிலின் மண்டபம் 175 அடி மற்றும் 95 அடி நீள அகலத்துடன் காட்சியளிக்கிறது. அதோடு மண்டபத்தையும், கர்ப்பக்கிரகத்தையும் இணைக்க ஒர் இடைவழி ஒன்று அமைந்துள்ளது. தஞ்சாவூர் கோயிலில் இருப்பதுபோன்றே இந்த இடைவழியின் மூலைகளில் வடக்கு, தெற்கு வாயில்கள் அழகான வேலைப்பாடுள்ள கதவுகளுடன், கண்ணைக் கவரும் துவார பாலகர்களுடனும், படிக்கட்டுகளுடனும் மிளிர்கின்றன.

140 தூண்கள் 


பெரிய மண்டபத்தில் 140 தூண்களும், 4 அடி உயரமுள்ள மேடை மீது, அகலப்பட எட்டு வரிசைகளில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. மண்டபத்தின் நடுவே, தரை மட்டத்தில் ஓர் அகன்ற பாதை போடப்பட்டிருக்கிறது. அது தொடர்ந்து, மண்டபம் முழுவதும் உள்ள உட்சுவரைச் சுற்றி ஒரு குறுகலான பாதை வழியாகச் செல்கிறது. அதன் மீது 18 அடி உயரமுள்ள தட்டையான கூரை, எல்லா பக்கங்களிலும் 16 அடி அகலத்திற்குப் பரவியிருக்கிறது.


அம்மனுக்கு தனிக்கோயில்


 கங்கைகொண்ட சோழபுரம் கட்டப்பட்ட காலத்திலேயே அம்மனுக்கும் ஒரு தனிக் கோயில் இங்கு கட்டப்பட்டுள்ளது. ஆனால் தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பெரியநாயகி அம்மன் சந்நிதி, கோயில் கட்டிய பின் 200 ஆண்டுகளுக்கு பின்னர் 13-ஆம் நூற்றாண்டில்தான் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.



பிரஹதீஸ்வரர் கங்கைகொண்ட சோழபுரத்தில் லிங்க வடிவில் காட்சிதரும் பிரஹதீஸ்வரர்.





சண்டேச அனுக்ரஹ மூர்த்தி 



தஞ்சை பெரிய கோயிலில் இல்லாத சிறப்பாக இந்தச் சிற்பத்தை பலர் குறிப்பிடுகின்றனர். அருகில் பார்வதி வீற்றிருக்க, காலடியில் பக்தியுடன் கைகூப்பியபடி அமர்ந்திருக்கும் சண்டேசருக்கு சிவன் பரிவட்டம் கட்டுகிறார்.






சிம்ஹகேணி 



கோயிலின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் சிம்ஹகேணி என்பது சிங்கத்தின் வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் கிணறு.











நந்தி


 கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்த நந்தி இந்தியாவின் மிகப்பெரிய நந்திகளில் ஒன்று.










துவாரபாலகர்கள் 



நுழைவாயிலில் பிரம்மாண்டமாக காட்சிதரும் துவாரபாலகர்கள்.












நடராஜர்


 அற்புத வேலைப்பாடுகளுடன் அமைந்த நடராஜர் சிலை.



இசைக்கலைஞர்கள் 


நாதஸ்வரம் மற்றும் தவில் வாசிக்கும் கலைஞர்கள்.


பிரம்மா பிரம்மனும், தேவதைகளும்.


இரண்டு நந்திகள்! 




கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் சிவபெருமானுக்கு முன்பு இரண்டு நந்திகள் இருக்கின்றன. இவற்றில் பெரிய நந்தி மண்டபத்துக்கு வெளியேயும், சிறியது மண்டபத்தின் துவக்கத்திலும் அமையப்பெற்றுள்ளன.









கோயில் கிணறு கோயில் வளாகத்தில் அமைந்துள்ள கிணறு.



மஹிசாசுரமர்த்தினி மஹிசாசுரனை சம்ஹாரம் செய்யும் துர்கா தேவி.


சிவ வழிபாடு ஒரு பெண் சிவபெருமானை வழிபடுவது போன்று கோயில் சுவற்றில் வடிக்கப்பட்டுள்ள சிற்பம்.





சிதைந்த சிற்பங்கள் கோயில் வளாகத்தில் உள்ள சிதைந்த மற்றும் முடிக்கப்படாத சிற்பங்கள்.




சரஸ்வதி ஞான சரஸ்வதியின் சிற்பம்.


முடிக்கப்படாத மண்டபம் நிறைய தூண்களுடன் காட்சியளிக்கும் முடிக்கப்படாத மண்டபம்.








அந்திவேளையில்... கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் அந்திவேளை தோற்றம்.

சோழ கேரளன் திருமாளிகை  





ராஜேந்திர சோழனின் பட்டப்பெயர்களில் ஒன்றான 'சோழ கேரளன் திருமாளிகை' கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரு காலத்தில் இருந்துள்ளது. ஆனால் அதன் சுவடுகள்தான் இன்று நமக்கு கிடைத்துள்ளன. இந்த அரண்மனையிலிருந்து, சோழபுரம் பெருவுடையார் கோயிலுக்கு சுரங்கப்பாதை ஒன்றும் அமைந்திருந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். 








ஆலமரம் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஆலமரம்.





எப்படி அடைவது? 


தஞ்சாவூரிலிருந்து 72 கி.மீ தொலைவில் கும்பகோணம், அணைக்கரை வழியாக ஜெயங்கொண்டம் போகும் வழியில் கங்கைகொண்ட சோழபுரம் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்கு நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்து சமயத்தில் சிவபெருமானை அருவம், உருவம், அருவுருவம் என மூன்று நிலைகளில் வழிபடுகின்றனர். இவற்றில் லிங்க வழிபாடு அருவுருவ நிலையை குறிக்கிறது. இந்த பிரபஞ்சத்தின் மூலமாக உள்ள ஆண் குறியையும், பெண் குறியையும் குறிப்பிடும் விதமாகவே லிங்கதின் தோற்றம் பார்க்கப்படுகிறது. அதாவது லிங்கத்தின் தண்டுபோன்ற தோற்றம் ஆண் வடிவத்தையும், அது வைக்கப்பட்டிருக்கும் பாகமான ஆவுடையார், பெண் குறியையும் குறிப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு ஆண் வடிவம் ருத்ர பாகம், விஷ்ணு பாகம், பிரம்ம பாகம் என் மூன்றாக பகுக்கப்பட்டுள்ள வேளையில், பெண் பாகம் சக்தி பாகம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் உலகில் சுயம்பு லிங்கம், தேவி லிங்கம், காண லிங்கம், தைவிக லிங்கம், ஆரிட லிங்கம், அசுர லிங்கம், மானுட லிங்கம், பரார்த்த லிங்கம், சூக்கும லிங்கம், ஆன்மார்தத லிங்கம், அப்பு லிங்கம், தேயு லிங்கம், ஆகாச லிங்கம், வாயு லிங்கம், அக்னி லிங்கம் என பல வகை லிங்கங்கள் காணப்படுகின்றன




தேவிபுரம் சிவலிங்கம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தேவிபுரம் கோயிலில் அமைந்துள்ள இந்த சிவலிங்கம் பட்டவர்த்தனமாக ஆண் குறி வடிவில் காட்சியளிக்கிறது.


கோடிலிங்கேஸ்வரர் 108 அடி உயரம் கொண்ட இந்த சிவலிங்கம் உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கமாக கருதப்படுகிறது. இது கர்நாடகத்தின் கோலார் நகரத்தில் உள்ள கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ளது.







ஐக்கிய லிங்கம் வாரணாசியில் உள்ள ஐக்கிய லிங்கம்.

அமர்நாத் பனிலிங்கம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தென்பகுதியில் இமயமலையின் மீது 5000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் அமர்நாத் குகை அமைத்துள்ளது.




1008 லிங்கங்கள் கர்நாடக மாநிலம் ஹம்பியில் துங்கபத்திரா நதிக்கரையில் பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட 1008 லிங்கங்கள்.






பானேஷ்வர் இரட்டை சிவலிங்கம் அஸ்ஸாம் மாநிலத்தின் காம்ரூப் மாவட்டத்தில் உள்ள பானேஷ்வர் சிவன் கோயிலின் இரட்டை சிவலிங்கம்.





நாகலிங்கம் ஆந்திர மாநிலம் லேபாக்ஷியின் பிரபல கோயிலான வீரபத்ரர் ஆலயத்தில் இந்த நாகலிங்கம் அமைந்துள்ளது.




தஞ்சாவூர் பெரிய கோயில் லிங்கம் உலகின் மிகப்பெரிய சிவலிங்கங்களில் ஒன்றாக கருதப்படும் பெரிய கோயில் சிவலங்கத்துக்கு பாலபிஷேகம் செய்யப்படுகிறது.







ஹொய்சலேஸ்வரர் கர்நாடக மாநிலம் ஹளேபீடு நகரில் அமைந்துள்ள ஹொய்சலேஸ்வரர் கோயிலின் சிவலிங்கம்.





குமரராமா பீமேஸ்வரர் கோயில் லிங்கம் ஆந்திர மாநிலம் சாமளக்கோட்டா நகரின் குமரராமா பீமேஸ்வரர் கோயில் லிங்கம் நீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது.



தியானலிங்கம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரியில் அமைந்துள்ள இந்த தியானலிங்கம் சத்குரு அவர்களால் 1994-ல் நிறுவப்பட்டது.



சிவபுரி ஸ்படிக லிங்கம் ஹைதராபாத்தில் உள்ள சிவபுரி கோயிலில் இந்த ஸ்படிக லிங்கம் அமைந்துள்ளது.




கேதாரேஷ்வர் மகாராஷ்டிராவின் மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் முக்கியமான வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டையிலுள்ள கேதாரேஷ்வர் குகையில் இந்த சிவலிங்கம் அமைந்துள்ளது. முழுவதுமாக நீரால் சூழப்பட்ட 5 அடி உயரமுள்ள இந்த லிங்கத்தை சுற்றி இடுப்பளவு நீர் சூழ்ந்துள்ளது. அதோடு மிகப்பெரிய நீர் பிரவாகமே இங்கு ஓடும் என்பதால் மழைக்காலத்தில் இந்தக் குகையை அடைவது முடியாத காரியம். மேலும் சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் அமையப்பெற்றுள்ளன. இந்தத் தூண்கள் சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களை குறிப்பதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு யுகம் முடிவடையும் போதும் ஒவ்வொரு தூணாக இடிந்து விழும். அதன்படி தற்போது 3 தூண்கள் இடிந்துவிட்ட நிலையில் கலியுகத்தின் முடிவில் நான்காவது தூணும் இடிந்துவிடும் என்று நம்பப்படுகிறது. அந்த நாளில் இந்த உலகமும் அழிந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது.




லிங்க வடிவ கோயில் பெங்களூர் கெம்ப் கோட்டைக்கு அருகே சிவலிங்க வடிவிலேயே காணப்படும் சிவன் கோயில்





ராஜ்பாரி சிவலிங்கம் அஸ்ஸாம் மாநிலத்தின் நாகாவ்ன் மாவட்டத்தில் உள்ள ராஜ்பாரி என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த சிவலிங்கம் மிகவும் தொன்மையானது என்று சொல்லப்படுகிறது.


சஹஸ்ரலிங்கம் கர்நாடக மாநிலம் சிர்சியிலிருந்து 10 கி.மீ தொலைவில், சஹஸ்ரலிங்கத்தின் அடர்ந்தகாடுகளில் ஆயிரக்கணக்கான சிவலிங்கங்கள் நீரில் அமிழ்ந்து காட்சியளிக்கின்றன.




கொடப்பகொண்டா லிங்கம் குண்டூர் நகரத்திற்கு தென்மேற்கே 40 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் கொடப்பகொண்டா கிராமத்தில் மலையுச்சியில் இந்த சிவலிங்கம் அமைந்துள்ளது.


கங்கைகொண்ட சோழபுரம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுர கோயிலில் உள்ள மிகப்பெரிய சிவலிங்கம்.






பஞ்சமுக சிவலிங்கம் ஆந்திர மாநிலம் பத்ராச்சலத்தில் உள்ள ITDA கோயிலில் இந்த பஞ்சமுக சிவலிங்கம் அமையப்பெற்றிருக்கிறது.


லிங்கமும், நந்தியும்! கர்நாடக மாநிலத்தின் தீர்த்தஹள்ளி பகுதியில் துங்க நதிக்கரையில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள சிறிய சிவலிங்கமும், நந்தியும்.






தானிதர் லிங்கம் குஜராத்தின் தானிதர் பகுதியிலுள்ள சிவன் கோயிலில் இந்த சிவலிங்கம் அமைந்துள்ளது.






ஜம்புலிங்கேஸ்வர் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவானைக்காவல் கோயிலின் மூலவரான ஜம்புலிங்கேஸ்வர், சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். அதாவது வடமொழியில் 'அப்பு' என்பதன் பொருள் நீர் என்பதாகும். இந்த லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும்.




காளை கோயில் சிவலிங்கம் பெங்களூரின் புகழ்பெற்ற காளை கோயிலில் அமைந்துள்ள சிவலிங்கம்.



சரிப்பள்ளி சிவலிங்கம் ஆந்திர பிரதேசத்தின் விஜயநகர மாவட்டத்தில் சரிப்பள்ளி எனும் சிறு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திலுள்ள ராமலிங்கேஷ்வரா கோயிலில் பாறைகளின் இடுக்கில் இந்த சிவலிங்கம் அமையப்பெற்றிருக்கிறது.



அரசனேஸ்வரர் சிவலிங்கம் விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்திலுள்ள இராயப்புதுப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அரசனேஸ்வரர் சிவலிங்கம்.





பைஜ்நாத் சிவலிங்கம் ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தின் பாலம்பூர் பகுதியிலுள்ள பைஜ்நாத் சிவன் கோயிலில் அமைந்துள்ள இந்த சிவலிங்கம் இலங்கை வேந்தன் இராவணனால் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.




கொடூர் சிவலிங்கம் ஆந்திர பிரதேசத்தின் மேடக் மாவட்டத்தில் உள்ள கொடூர் என்ற கிராமத்தில் தரையோடு தரையாக இந்த சிவலிங்கம் அமைந்துள்ளது.




புசன்தேஸ்வரர் ஒடிஸா மாநிலத்தின் மிகப்பெரிய லிங்கமாக கருதப்படும் புசன்தேஸ்வர கோயில் சிவலிங்கம்.





அழகுசொக்கர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பறம்புமலை அடிவாரத்தில் அழகுசொக்கர் என்றழைக்கப்படும் இந்த சிவலிங்கம் அமைந்துள்ளது.






குடிலோவா ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள குடிலோவா மலையுச்சியில் இந்த சிவலிங்கம் அமைந்துள்ளது.



போஜ்பூர் சிவலிங்கம் மத்தியப்பிரதேச மாநிலத்திலுள்ள போஜ்பூர் சிவன் கோயிலின் மிகப்பெரிய சிவலிங்கம்.






மீனாட்சியம்மன் கோயில் லிங்கம் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அமைந்துள்ள சிவலிங்கம்.



கத்ரி சிவலிங்கம் மங்களூரில் உள்ள கத்ரி மஞ்சுநாதர் கோயில் சிவலிங்கம்.




லிங்கோத்பவர் ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை கோயிலில் லிங்கோத்பவராக காட்சிதரும் சிவபெருமான்.



நாராயன் மஹாராஜ் மட சிவலிங்கம் மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் நாராயன் மஹாராஜ் மடத்தில் அமைந்துள்ள சிவலிங்கம்.




படவலிங்கம் கர்நாடக மாநிலம் ஹம்பியில் லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கருகில் 9 அடி உயரமுள்ள இந்த படவலிங்கம் அமைந்துள்ளது. ஒற்றைக் கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ள இந்த லிங்கத்தில் மூன்று கண்கள் செதுக்கப்பட்டுள்ளன. இது சிவனின் மூன்று கண்களாக கருதப்படுகின்றன.




மஹாதேவ் லிங்கம் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள மஹாதேவ் ஆலய சிவலிங்கம்.



கதர்வாரா டமரு காட்டி லிங்கம் மத்தியப்பிரதேச மாநிலத்தின் நரசிங்கப்பூர் மாவட்டத்தில் உள்ள கதர்வாரா நகரிலுள்ள டமரு காட்டி சிவலிங்கம்.




மாமலேஷ்வர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்கம் நகரில் உள்ள மாமலேஷ்வர் கோயில் சிவலிங்கம்.



மாஹேஸ்வர் படித்துறை லிங்கம் மத்தியப்பிரதேச மாநிலத்தின் மாஹேஸ்வர் நகர படித்துறை ஒன்றில் அமையப்பெற்றுள்ள சிவலிங்கம்.



ரலாஜ் சிவலிங்கம் குஜராத் மாநிலம் கம்பத் நகரில் உள்ள ரலாஜ் கோயிலின் மேல் பகுதியில் அமைந்திருக்கும் மிகப்பெரிய சிவலிங்கம்.



மாஹேஸ்வர் சிவலிங்கம் மத்தியப்பிரதேச மாநிலத்தின் மாஹேஸ்வர் நகரில் நர்மதை நதியில் அமைந்துள்ள சிவலிங்கம்.





\





கிணற்றுலிங்கம் அஸ்ஸாம் மாநிலம் காம்ரூப் மாவட்டத்தில் வரலாற்று சிதைவுகள் காணப்படும் இடமொன்றில் ஒரு கிணறுக்குள் இந்த சிவலிங்கம் அமைந்துள்ளது.



அக்கமாதேவி குகை லிங்கம் ஸ்ரீசைலம் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் நல்லமலை குன்றில் அக்கமாதேவி குகைகள் அமைந்திருக்கிறது. 150 அடி ஆழம் கொண்ட சரித்திர சிறப்பு வாய்ந்த அக்கமாதேவி குகையில் இந்த லிங்கம் காணப்படுகிறது.





தர்மராஜேஷ்வர் சிவலிங்கம் மத்தியப்பிரதேச மாநிலத்தின் மந்த்சௌர் மாவட்டத்தில் உள்ள தர்மராஜேஷ்வர் கோயிலின் சிவலிங்கம்.





ராமேஷ்வர் சிவலிங்கம் மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராமேஷ்வர் கோயிலில் தரையோடு தரையாக அமையப்பெற்றுள்ள சிவலிங்கம்.




குல்பாஹர் சிவலிங்கம் உத்தர பிரதேசத்தில் உள்ள குல்பாஹர் நகரில் அமையப்பெற்றுள்ள 10-ஆம் நூற்றாண்டு கிரானைட் சிவலிங்கம




லக்ஷ்மனேஷ்வர் சத்தீஸ்கர் மாநிலம் கரோட் நகரில் உள்ள லக்ஷ்மனேஷ்வர் கோயில் சிவலிங்கம்.


ஷங்கர் ஆலய லிங்கம் மகாராஷ்டிர மாநிலத்தின் தொழில் நகரங்களில் ஒன்றான கோபோலியில் உள்ள ஷங்கர் கோயிலின் சிவலிங்கம்.






பரசுராமேஷ்வர் சிவலிங்கம் ஒடிஸா தலைநகரம் புபனேஸ்வரில் பரசுராமேஷ்வர் கோயிலின் வெளியே அமையப்பெற்றிருக்கும் சிவலிங்கம்.



ஹரிஹரநாத் சிவலிங்கம் உத்தரபிரதேச மாநிலம் ஞான்பூர் நகரில் உள்ள ஹரிஹரநாத் மந்திரில் அமைந்திருக்கும் சிவலிங்கம்.



கங்கா படித்துறை லிங்கம் வாரணாசியில் கங்கை நதிக்கரையோரம் அமைந்திருக்கும் படித்துறை ஒன்றில் காணப்படும் சிவலிங்கம்.





அரண்மனை சிவலிங்கம் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகரி மாவட்டத்தில் உள்ள தீபா அரண்மனையில் இந்த சிவலிங்கம் அமைந்தள்ளது.




கங்கேஷ்வர் தேவ் லிங்கம் ஒடிஸாவின் ரான்பூர் பகுதியில் உள்ள கங்கேஷ்வர் தேவ் கோயிலின் சிவலிங்கம்.




மவுண்ட் அபு சிவலிங்கம் ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபு ஸ்தலத்தில் அமைந்துள்ள சிவலிங்கம்.




மதுரா சிவலிங்கம் உத்தரபிரதேச மாநிலம் மதுரா நகரில் உள்ள சனி பகவான் கோயிலில் அமைந்துள்ள சிவலிங்கம்.


பாடாலேஷ்வரர் மகாராஷ்டிர மாநிலம் புனே நகரிலுள்ள பாடாலேஷ்வரர் கோயிலின் சிவலிங்கம்.