மஹா தேஜஸ் லிங்கம் .
நவபாஷாணத்துக்கு நிகரான சூரியகாந்த தன்மை
கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட லிங்கம்
இது மூலஸ்தானத்தில் காகபுஜண்டரின்
உருவம் பொறிக்கப்பட்டுள்ளது .
முருகன், 12
திருக்கரங்களுடனும், வள்ளி
தெய்வானையுடன் பறக்கும் மயிலில்
ஆசனமிட்டு, சுமார் 8 அடி உயரத்திற்கு
பிரமாண்டமாக அமைந்திருப்பது மிகவும்
விசேஷமானது.
காகபுஜண்டர் இந்த கோயிலின் அருகில் சமாதி
அடைந்ததை ஒட்டி சமாதி பீடம் அமைக்கப்பட்டு
திருவிளக்கு ஏற்றப்பட்டு வருகிறது.
இத்தலத்து அம்பாள் மகாலட்சுமி அம்சத்துடன்
சுவர்ணாம்பிகை என்ற பெயருடன் நின்ற
கோலத்தில் அருளுகிறாள்.
இவள் கிழக்கு பார்த்து நின்றிருந்தாலும், இவளது
முகம் சிவன் இருக்கும் திசை நோக்கி சற்று
திரும்பியுள்ளது.
காகபுஜண்டர், மனைவி பகுளாதேவி ஆகியோரின்
ஜீவசமாதி இவளது பார்வையில் படும்படி உள்ளது.
இக்கோயிலானது வாயு ஸ்தலத்திற்கும், பஞ்சபூத
ஸ்தலத்திற்கும் இணையாக இருப்பதால் இதன்
கருவறையானது மிகவும் உக்கிரமானதாக
இருக்கும்.
இதன் கருவறையில் ஏற்படும்
தீபமானது துடித்துக்கொண்டே இருக்கும் என்று
காகபுஜண்டர்நாடிசுவடியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் கருவறையின் மையத்தில் அமைந்த
தீபம் மட்டும் இன்றும் துடிப்புடன் எரிந்து
கொண்டிருப்பது நாடி சுவடியின் பூரணத்துவத்தை
நமக்கு உணர்த்துவதாக உள்ளது.
அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்,
தென்பொன்பரப்பி-606 201, விழுப்புரம் மாவட்டம்.
இருப்பிடம் : சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து
கள்ளக்குறிச்சி செல்லும் வழியில் அம்மையகரம்
பஸ் ஸ்டாப்பில் இருந்து மேற்கே ஒரு கி.மீ.
தூரத்தில் சொர்ணபுரீஸ்வரர் கோயில் உள்ளது.
No comments:
Post a Comment