Monday, October 13, 2014

கந்தப் பெருமானே


"எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ!

சிந்தாகுலமானவை தீர்த்து எனை ஆள்

கந்தா! கதிர்வேலவனே! உமையாள்

மைந்தா! குமரா! மறைநாயகனே!"



"கந்தப் பெருமானே! ஒளிவீசும் வேலாயுதத்தை 

உடையவரே! உமாதேவியின் மைந்தரே! குமார 

மூர்த்தியே! வேத மூர்த்தியே! தேவரீர் அடியேனின் 

தாயும்,அடியேனுக்குஅருள்புரியும் தந்தையும் ஆவீர்!

அடியேனின்மனவருத்தங்கள் யாவற்றையும் நீக்கிஅடியேனை

ஆண்டருள்வீராக!"


No comments:

Post a Comment