Monday, October 13, 2014

பிரளயகாலேஸ்வரர் கோயில் ,பெண்ணாடம் .




தொழுதூரிலிருந்து திட்டக்குடி வழியாக விருத்தாசலம் செல்லும் சாலையில் வெள்ளாற்றங்கரையில் அமைந்துள்ளது பெண்ணாடம். 
ஆதிகாலத்தில் பெண்ணாகடம் என்றழைக்கப்பட்ட இவ்வூரில் அமைந்துள்ளதே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம்.



மூலவர் : பிரளயகாலேஸ்வரர் ( சுடர்க்கொழுந்துநாதர்)
அம்மன்/தாயார் : அழகிய காதலி (ஆமோதனாம்பாள், கடந்தை நாயகி)

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 2வது தலமாகும்.


இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார்.. வெள்ளத்திலிருந்து பூமியை காப்பதற்காக அன்று திசை திரும்பிய நந்தி இன்றும் வாசலை நோக்கி திரும்பியே இருக்கிறது. .இக் கோயிலில் ஆஞ்சநேயருக்கும் சந்நிதி உண்டு. கலிக்கம்ப நாயனார், மெய்கண்டார், ஆகியோருக்கும் சந்நிதிகள் இங்கே இருக்கின்றன!

No comments:

Post a Comment