Tuesday, September 23, 2014

அய்யாவாடியில் நிகும்பலா யாகம்: திரளான பக்தர்கள் தரிசனம்!
செப்டம்பர் 23,2014


மயிலாடுதுறை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடியில் ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயில் உள்ளது. புகழ் பெற்ற இந்த கோயிலில் அமாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் சிறப்பு வாய்ந்தது. நிகும்பலா யாகத்தில் கலந்து கொண்டு அம்பாளை தரிசித் தால் சத்ரு உபாதை நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். புரட்டாசி மாதம் சர்வ மஹாளய அமாவாசையை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.




9 மணிக்கு அம்பாளை கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்து பூஜைகள் நடத்தப் பட்டன. 1 மணிக்கு தண்டபானி குருக்கள் யாகத்தில் மிளகாய்வற்றல் கொட்டி நிகும்பலா யாகத்தை ந டத்தி வைத்தார். யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். யாகத்திற்கான ஏற்பாடுகளை சங்கர்குருக்கள் செய்திருந்தார். கும்பகோனத்திலிருந்து அய்யாவாடிக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நாச்சியார்கோயில் போலீஸ் மற்றும் ஊர்காவல் படையினர் பா துகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஐப்பசி மாத அம்மாவாசை அன்று வழக்கம் போல மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் நடத்தப்படமாட்டாது எனவும் கார்த்திகை மாத அம்மாவாசை அன்று நிகும்பலா யாகம் நட த்தப்படும் எனவும் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment