Thursday, January 22, 2015

கோகர்ணத்தீஸ்வரர்

download
கர்னாடக மானிலத்தின் இரண்டாவது பெரிய நகரம் மங்களூரு. கடற்கரையும் மலைப்புறமும் ஒன்று சேர்ந்து வசீகரிக்கும் இயற்கை அழகு கொண்டது. கேரளத்தின் எல்லையில் அமைந்திருக்கும் இந்த நகரத்தின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது நாராயணகுரு கட்டிய ஒரு கோயில்.
கேரளத்தில் ஆலயங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளே வர தடை இருந்த சென்ற  நூற்றாண்டில் சமூக மறுமலர்ச்சி ஏற்படுத்திய ஸ்ரீ நாராயணகுரு ஈழவ சமுதாயத்துக்காகவே பல கோயில்களைக் கட்டினார். இறைவனின் சன்னதிக்குள் ஈழவ மக்கள் அணுக முடியாத சூழல் இருந்ததால் அவர்களுக்காக 1912ம் ஆண்டில் மங்களூரு நகருக்கு வருகை தந்தபோது இங்கு எழுப்ப தீர்மானித்தார். இந்த இடம் திப்பு சுல்தான் காலத்தில் குதிரை லாயமாகவும் குதிரைகள் மேய்ச்சல் இடமாகவும் திகழ்ந்தது. எனவே குதிரே வாலி என்று அழைக்கப்பட்டு பின்னாளில் குத்ரோலி என்று பெயர் உருமாற்றம் பெற்றது. இந்த இடத்தை ஸ்ரீகோகர்ண நாத க்ஷேத்ரம் என்று அழைத்தார்.

download (1)
இந்தக் கோயிலும்கூட கேரளபாணியில்தான் முதலில் கட்டப்பட்டு பின்னாளீல் சோழர்கால கட்டடக் கலை அம்சத்தில் மாற்றப்பட்டுள்ளது. கோயிலுக்குள்  நுழையும்போதே பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் தமிழ் நாட்டுப்பாணியிலான அறுபதி அடி ராஜ கோபுரம். கோபுரத்துக்கு முன் மிகப்பெரிய நந்தியின் சிலையை தரிசிக்கிறோம்.

images (2)
கோயிலுக்குள் நுழைந்த பின் வலது புறத்தில் நாராயண குருவின் பளிங்கு சிலையை தரிசிக்கலாம். சிலையில் உள்ள கீரிடத்தில் ரத்தினக் கற்கள் மின்னுகின்றன, இவை பக்தர்களால் அவருக்கு சமர்பிக்கப்பட்டவையாம்.

images
கோயிலில் பிரதான் தெய்வமாகக் காட்சி அளிக்கிறார் கோகர்ணத்தீஸ்வரர். அன்னபூர்ணேஸ்வரி சன்னதி அருகில் உள்ளது. கணேசர்  காலபைரவர் ஆகியோருக்கும் தனி சன்னதிகள் உள்ளன. கோயிலைச் சுற்றி வரும்போது ஸ்ரீ கிருஷ்ணன் சன்னதியையும்  முகப்பில் பகவத்கீதா உபதேசத்தையும் தரிசிக்கலாம். சுற்றுலுமுள்ள கோஷ்டங்களில் துர்கை  தத்தாத்ரேயர் விஷ்ணு உள்ளிட்ட தெய்வங்களின் சிற்பங்களை அழகுறக் காட்சி அளீக்கின்றன,

images (1)
பிரதான சன்னதியின் பின்புறம் நாகர் சன்னதி உள்ளது. உள்ளே ஒரு தடாகம். அதன் ஒரு புறத்தில் பனிமலை மீது சிங்கத்தின் அருகில் கையில் சூலத்தோடு நிற்கும் பார்வதி மற்றும் வினாயகர் முருகன் ஆகியோர். தடாகத்தின் நான்கு மூலைகளிலும் சிவபெருமானின் பெரிய உருவம் ஆலகால விஷம் உண்ட  நீலகண்டனாக விதவிதமான் வடிவங்களீல் காட்சியளிக்கிறார். 

downl
கோயிலில் நித்தயப்படி பூஜைகள் குறைவற நடக்கின்றன, நவராத்ரி சமயம் நவதுர்கையரின் ஷோப யாத்திரை விழா மிகச்சிறப்பாக நடக்கிறது. மகா சிவராத்ரி இங்கே மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இங்கிருந்து சற்று தொலைவில் தான் மங்களூரு நகருக்கே இந்தப் பெயர் வருவதற்கு காரணமான மங்களாதேவி கோயிலும் உள்ளது.

சிவன் தந்த லிங்கம்

download
ராமபிரான் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் ராமேஸ்வரம், பட்டீஸ்வரம் வேதாரண்யம் என்று தமிழகத்தில் சொல்லப்படுவது போலவே பிற இடங்களிலும் தல புராணங்கள் உண்டு. என்றாலும் ஸ்ரீராமன் பிரதிஷ்டை செய்யும் பொருட்டு சிவபிரான் தாமே நேரில் தோன்றி லிங்கத் திருவடியைத் தந்தருளிய தலம் கேசரகுட்டா. ஆந்திர மானிலம் ஹைதிராபாத்ஹ்டிலி இருந்து 15 கி மீ தொலைவில் உள்ளது இந்த மலைக்கோயில்.

download (3)
கடினமான மலைப்பிரதேசத்தில் பாறைகளின் மத்தியில் இக்கோயில் அமைந்துள்ளது. சாதாரண நாட்களில் பக்தர்கள் அதிகம் வருவதில்லி. ஆனால் கார்த்திகை மாதம் முழுவதும் இங்கு அலைமோதும் பக்தர்கல் கூட்டம் கணக்கிலடங்காது. சாரிசாரியாக மாட்டு வண்டிகளில் யாத்ரீகர்கல் வந்தவண்ணம் இருப்பார்கள்.

download (1)
திரேதாயுகத்தில் ஸ்ரீ ராமபிரான் ராவண சம்ஹாரம் முடித்து அயோத்தி திரும்பும் வழியில் இந்த இடத்தைப் பார்த்தவுடன் இங்கு சிறிது சிரம பரிகாரம் செய்துகொண்டு போக விரும்பினாராம். அரக்க குணம் கொண்ட ராவணன் அந்தண குலத்தில் பிறந்து சந்தியாவந்தனம் உள்ளிட்ட் நித்ய கர்மாக்களை முறையாகச் செய்தவன். ஆதலால் அவனை வதைத்த தோஷம் நீங்க ராமர் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதே போன்ரு இங்கு வழிபட அனுமனி அழைத்து காசியிலிருந்து லிங்கம் கொண்டு வரும்படி பணித்தார். காசி சென்ற அனுமன் 101 சிவலிங்கங்களைச் சுமந்துகொண்டு வருவதற்கு தாமதமாகிவிட்டது. குறிப்பிட்ட முகூர்த்தத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்ய விரும்பிய ராமர் நேரம் ஆகிவிட்டதே என்று கவலைப்பட்டார். அந்த நேரத்தில் சிவபிரான் தாமே தோன்றி லிங்க வடிவை தந்தருளினார் என்கிறது புராணம். தாமதமாக வந்த அனுமன் தான் வருவதற்கு முன்பே ஸ்ரீராமர் லிங்கப் பிரதிஷ்டை செய்துவிட்டதைக் கண்டு கோபமும் வருத்தமும் கொண்டு தான் கொண்டுவந்த லிங்கங்களை அப்படியே அந்த மலை மீதிருந்து நாலாபுறத்திலும் தூக்கி எறிந்துவிட்டான் என்கிறார்கள். அப்படி எறியப்பட்ட லிங்கங்கள் இன்றும் பல கோணங்களில் இந்த கேசரகிரி ராமலிங்கேஸ்வரர் கோயிலுக்கு அருகில் சிதறிக் கிடப்பதைக் காண்கிறோம். ஏமாற்றமடைந்த அனுமனை சாந்தப் படுத்தும் விதமாக அந்த லிங்கங்களில் எதை பூஜித்தாலும் தான் பிரதிஷ்டை செய்த ராமலிங்கேஸ்வரரைப் பூஜித்த பலன் கிடைக்கும் என்று அருளினார் ஸ்ரீ ராமர்.

download (2)
இன்றும் கூட இங்கு சிதறி இருக்கும் எல்லா லிங்கத் திருமேனிகளையும் பக்தர்கள் பூஜிப்பதை காணலாம். யாத்ரீகர்கள் இங்கு முதலில் அனுமன் சன்னதியை வழிபட்ட பிறகே சிவனைத் தரிசிக்கின்றனர். ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமான் ஸ்ரீ பவானி ராமலிங்கேஸ்வர ஸ்வாமி என்றும் அழைக்கப்படுகிறார். அதற்கேற்ப மூலஸ்தானத்தில் அம்பிகைக்கான பிம்பம் ஒன்றும் காணப்படுகிறது.

images (1)
சிவராத்திரி தினங்களில் இங்கே பெருந்திரளான பக்தர்களைக் காண்கிறோம் சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் என்றும் பொருள். மங்களத்தை அருளும் பெருமானுக்குரிய மங்களமான ராத்திரியில் அவரைத் தரிசிப்பதும் வணங்குவதும் பூஜிப்பதும் நம் வாழ்வில் மங்கலத்தை நிரப்புவதில் என்ன ஆச்சர்யம்.

images

மங்களாதேவி

ஒடிஸா என்றதும் பூரி ஜகந்நாதர் ஆலயந்தான் நம்  நினைவுக்கு வரும். அங்கு நடைபெறும் ரத யாத்திரை உலகப்புகழ் பெற்றது. அந்த யாத்திரைக்கு முன் கிருஷ்ணர் பலராமர் சுபத்ரா சிலா ரூபங்களை வடிக்க ஆண்டுதோறும் மூன்று மரங்களைத் தேர்வு செய்வார்கள். அதற்குரிய மரம் எங்கே இருக்கிறது என்று குறித்துக் காட்டுபவள் மங்களாதேவி. அவள் கோயில் கொண்டுள்ள இடம் காகத்பூர்

download (4)
இது ஒடிஸாவிலுள்ள பூரி  நகரத்திலிருந்தும் புவனேஸ்வர் நகரத்திலிருந்தும் அறுபது கி மீ. இந்தக் கோயில் சிறந்த சக்தி வழிபாட்டுத் தலமாக சக்தி உபாசகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்தக் கோயிலைப் பற்றி இங்கு சொல்லப்படும் கதைகள் அனேகம். ஒரு சமயம் ஒரு படகோட்டி இந்தக் கோயில் அருகிலுள்ள பிராசி நதியைக் கடக்க படகில் சென்றான். அப்போது  நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு படகில் செல்வதே மிகவும் கடினமாக இருந்தது. எப்படியோ சிரமப்பட்டு படகை ஓட்டிச்சென்ற அவனுக்கு பாதி ஆற்றைத் தாண்டிய பிறகு முன்னேற முடியவில்லை. படகு அப்படியே நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

download (1)அன்று இரவு அவனது கனவில் மங்களாதேவி தோன்றி படகு நிற்கும் இடத்துக்கு கீழே நதியில் தான் புதைந்து இருப்பதாக்வும் தன்னை எடுத்து பக்கத்தில் உள்ள இந்த காகத்பூரில் கோயில் அமைத்து பிரதிஷ்டை செய்யும்படியும் கூறினாளாம். அதன்படியே கண்டெடுக்கப்பட்ட சிலை இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறுகின்றனர்.

images (1)
காகத்பூர் என்று இந்த ஊருக்கு பெயர் வந்ததற்கும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது,அம்மனை நதியிலிருந்து எடுத்த் இடத்தில் ஒரு காகம் தண்ணீருக்குள் சென்றதாகவும் அது பிறகு வெளியே வரவே இல்லை என்றும் சொல்கிறார்கள். ஆகையால் காக்கை மூழ்கிய இடம் அதாவது ஒரிய மொழியில் காட என்பது காகத்தையும் அட்க என்பது மூழ்கியது என்பதையும் குறிக்கும். ஆகையால் காக அட்காவூர் என்று அழைக்கப்பட்டு மருவி காகத்பூர் என்றாகியுள்ளது.

download (2)
இங்கு நதியின் அருகிலேயே கருங்கல்லினாலான் ஒரு மேடை உள்ளது. இதில்தான் இந்த தேவி இந்தப் பூவுலகையெல்லாம் சுற்றி சஞ்சாரம் செய்துவிட்டு இரவில் சயனித்துக் கொள்வதாக சொல்கிறார்கள். அந்த மேடையும் பார்ப்பதற்கு உண்மையிலேயே உபயோகித்த ஒரு மெத்தை கசங்கி இருப்பது போன்ற தோற்றத்தில் உள்ளது.
இந்த மங்களாதேவி மிகவும் சக்தி வாய்ந்தவள். வருடா வருடம் வைகாசி மாதத்தில் வரும் முதல் செவ்வாய்க்கிழமையில் இங்கு தீ மிதி உற்சவம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதை ஜாமு யாத்திரை என்பார்கள்.

downloadதீ மிதிக்க வேண்டிக்கொண்டவர்கள் பிராசி நதியில் நீராடி ஒரு குடத்தில் அந்த நதியின் தண்ணீரை தங்கள் தோள்களில் வைத்துக்கொண்டு இங்கு பரப்பியிருக்கும் தீக்குழியில் நடந்து செல்கிறார்கள். இதில் பங்கேற்கும் எந்த பக்தருக்கும் தீயினால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. அவர்கள் வேண்டுதலும் நிறைவேறுகின்றன என்பது பக்தர்களின் அனுபவம்,

அசரவைக்கும் அக்ஷர்தாம்




கருவறையில் உருவமாக சிவபெருமான்

download (2)
ஆந்திரபிரதேசத்தில் 9 மற்றும் 10ம் நூற்றாண்டுகளில் நுளம்ப பல்லவ மன்னர்களின் தலை நகராக விளங்கிய தலம் ஹேமாவதி. அக்காலத்தில் ஹெஞ்சேரு என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் ஆங்கிலேயர்களின் காலத்தில் ஹேமாவதி ஆனது.

download (4)
நுளம்ப பல்லவ மன்னர்களுள் ஒருவரான மகேந்திரன் என்பவனின் ஆட்சியின்போது இங்குள்ள ஆலயங்கள் மிகச் சிறப்பாக பராமரிக்கப்பட்டனவாம். நுளம்ப பல்லவர்களாலும் பின்னர் வந்த சோழ மன்னர்களாலும் கட்டப்பட்ட நான்கு சிவாலங்கள் இங்கு பிரசித்தி பெற்று விளங்குகின்றன. அதில் சித்தேஸ்வரர் ஆலயத்தில் மட்டும் சிவபெருமானை உருவத்திருமேனியிலும் மற்ற ஆலயங்களில் லிங்கத் திருமேனியிலும் தரிசிக்கலாம்.

images (1)
பழமையும் வரலாற்றுச் சிறப்பும் கொண்ட சித்தேஸ்வரர் ஆலயத்தின் முன்பு அக்னி தீர்த்தகுண்டம் உள்ளது. கருவறையில் நான்கு கரங்களுடன் ஒரு பீடத்தின் மீது சித்தேஸ்வரர் இடக்காலை மடக்கி வலக்காலை தொங்கவிட்டவாறு அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவர் ஹெஞ்சேரப்பா என்றும் அழைக்கப்படுகிறார். அவரது பின்புறம் பிரபை போன்று சுருள் சுருளாக சடாமுடி உள்ளது. பின் இடக்கையில் டமருகமும் வலக்கரத்தில் திரிசூலமூம் முன் இடக்கையில் கபால பாத்திரமும் ஏந்தியிருக்க பின் வலக்கை அபய ஹஸ்தமாக உள்ளது. தினமும் இறைவனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் ருத்ர ஹோமம் ஜபம் நடக்கின்றன,  நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவரை வழிபடுகின்றனர்.

download (3)
பிரகாரத்தில் துர்க்கையின் அம்சமான நவகோடம்மா  வினாயகர்  கால பைரவருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. சித்தேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்ரி பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. பிரதோஷத்தன்றும் திங்கட்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

download
இங்கு ஆலய வளாகத்தில் தொட்டேஸ்வரர் சோமலிங்கேஸ்வரர் விருபாட்சேஸ்வரர் மல்லேஸ்வரர் ஆலயங்களும் உள்ளன. இவற்றோடு சித்தலிங்கேஸ்வரரையும் சேர்த்து இத்தலத்தை பஞ்சலிங்க க்ஷேத்திரமாக வழிபடுகின்றனர்.download (5)
மிகப் பழமையானதாகக் கருதப்படும் தொட்டேஸ்வரர் ஆலயத்தின் மூலவர் ஆறடி உயர லிங்கமாக அருளுகிறார். இவருக்கு நேர் எதிரில் 4 அடி உயரமும் 8 அடி நீளமும் கொண்ட பெரிய நந்தி உள்ளது. இங்குள்ள கருங்கல்லால் வடிக்கப்பட்ட தூண்களும் சிலைகளும் கலை நயமிக்கவை. ராஜேந்திர சோழ மன்னன் இத்தூண்களின் அழகில் மயங்கி அவற்றில் 44 தூண்களை வேறு ஓரிடத்தில் ஆலயம் கட்டுவதற்கு எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. உருவத் திருமேனியாக எழுந்தருளியிருக்கின்ற சித்தேஸ்வரரை மனதார வழிபட்டால் மனச் சஞ்சலங்கள் அகன்று அமைதியான வாழ்க்கை அமையும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்,

download (1)

 ஆந்திராவில் அனந்தப்பூரிலிருந்து சுமார் 160 கி மீ தொலைவில் ஹேமவதி என்ற கிராமத்தில் இந்த ஆலயம் உள்ளது.

மகாமாயா

download (2)
ஆதிசங்கரர் அருளிச்செய்த அன்னபூர்ணாஷ்டகத்தில் தேவி காஷ்மீரில் வசிப்பவளாகப் போற்றப்படுகிறாள். ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர்க்கப்பட்ட ஸ்ரீ கண்ணனுக்கு சகோதரியாக யசோதைக்கும் நந்தகோபருக்கும் பிறந்த சக்தி மாயாதேவி. குழந்தைகள் இடம் மாற்றப்பட்டவுடன் வானிலிருந்து கம்சனை நோக்கி கம்பீரமாகச் சிரித்தாள் இந்த மாயாதேவி.
பல கோடி மக்களால் சக்திதேவி பல உருவங்களில் வணங்கப்படுகிறாள். அபிஷேக ஆராதனையில் தொடங்கி சூலம் க்ரகம் செடல் பாத யாத்திரை அங்கப் பிரதட்சணம் என்று அவரவர் சார்ந்து இருக்கும் சமுதாய கலாச்சார வழக்கப்படி தேவி பக்தர் மனதில் நீங்கா இடம் கொண்டு உறைகிறாள். அழகிய ‘ தாவி’ நதிக்கரையில் பாஹூ கோட்டைக்குப் பின்புறம் விசேஷமான சக்தி வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது மகாமாயா தேவி கோயில். இக்கோயில் அமைந்த சாலைக்கு மோஹ்மாயா சாலை என்றே பெயர்.

download
தட்சனின் யாகத்தில் உயிர்த்தியாகம் செய்த தாட்சாயணியாகிய தேவியின் உடலை மகாவிஷ்ணு தன் சக்கரத்தால் பல கூறுகளாக்கி பல இடங்களில் விழச் செய்கிறார். அந்த இடங்கள் சக்தி பீடங்களாகப் புகழ் பெற்று வழிபாட்டுத்தலங்களாகத் திகழ்கின்றன.
பாகம்பிரியாளான உமையவள் அக்ஷரஸ்வரூபியல்லவா அதனால் 54 சக்தி பீடங்களில் தேவி அருள்புரிகிறாள். திரிகோணம் எனப்படும் முக்கோணவடிவம் சக்தி வழிபாட்டில் முக்கிய சின்னம் இதனை உறுதிப்படுத்துவதுபோல் வடக்கே காஷ்மீரம் மேற்கில் அஸ்ஸாமிலுள்ள காமாக்யா தெற்கு எல்லையில் கன்னியாகுமர் என்று பாரத தேசத்தை சக்தி வழிபாட்டுச் சின்னமாகவே மாற்றி இந்த திருக்கோயில்கள் திகழ்கின்றன.

images
காஷ்மீரில் ஸதி தேவியின் கழுத்துப்பகுதி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இங்குள்ள தேவியையே மகாமாயா என்று அழைக்கின்றனர். வட நாட்டில் சிவபெருமானை பைரவர் என்றே குறிப்பிடுகின்றனர். மகாமாயா கோயிலில் த்ரிஸ்ந்தியேசுரர் என்ற பெயருடன் விளங்குகிறார் வாமதேவர். இவர் தனி சன்னதியில் பாணலிங்க வடிவத்தில் அருள்பாலிக்கிறார். ஆவுடை இல்லை வெள்ளிக்கண் மலருடனும் நாக தேவருடனும் விளங்குகிறார் ஆதிசிவன்.

download (3)
இந்தக் கோயிலைச் சுற்றி காஷ்மீரைச் சேர்ந்த ஒரு வீரப்பெண்மணியின் கதையும் பின்னப்பட்டுள்ளது. சுமார் 150 வருடங்களுக்கு முன்னால் டோக்டா இனத்தைச் சேர்ந்த மாயா என்ற பெண் காஷ்மீரில் வாழ்ந்து வந்தாள். எதிரி நாட்டினர் இந்தப் பிரதேசத்தைக் கைப்பற்ற முற்றுகையிட்டனர். அரசர்களே எதிர்த்துச் சண்டையிட பயந்த அக்காலகட்டத்தில் எழுச்சியடைந்த மாயா ஒரு படைக்குத் தலைமை தாங்கி காண்போர் பயந்து மிரளும்படி போரிட்டாள். தன் படையையும் உற்சாகப்படுத்தி போரிட வைத்தாள். எதிரிகள் அவளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் புறமுதுகிட்டு ஓடினர்.

download (4)
தமது பிரதேசத்தையும் இனத்தையும் காக்கும் மகத்தான தன்னலமற்ற பணியில் உயிர்த் தியாகம் செயதாள் மாயா மக்களால் ‘மாயா’ இறையம்சம் பொருந்தியவளாகப் போற்றப்பட்டாள். தங்களை காக்கவே மகாமாயா தேவியாக உருவெடுத்தாள் என்று திடமாக நம்பும் டோக்டா இனத்தவர் அவளுக்குக் கோயில் கட்டி வழிபடவும் ஆரம்பித்தனர். காஷ்மீரின் மலைப்பகுதியில் பாஹூ கோட்டைக்கு அருகிலேயே இக்கோயி இருப்பதும் இந்தச் செவி வழிக் கதைக்கு வலு சேர்க்கிறது. அழகிய சிறு கோயில் அமர்ந்த திருக்கோலத்தில் கையில் சூலத்துடன் மாயாதேவி வடிவம் வெள்ளிக் கண் மலர்கள்
நியாயத்தை நிலை நாட்ட அநீதியை அழிக்க தந்தையையும் எதிர்த்து நின்றவள் உமாதேவி. நமது நாட்டில் பல சக்தி பீடங்களில் அசுரர்களை வதைத்து தம்மை அண்டியவர்களைக் காத்து நிற்கிறாள் ஜகன்மாதா.
இந்தத் திருத்தலம் சக்தி தேவியின் அன்பர்களுக்கு பெண்மையைப் போற்றுபவர்களுக்கு இயற்கையை ரசிப்பவர்களுக்கென பலதரப்பட்ட மக்களையும் ஈர்க்கும் வண்ணம் திகழ்கிறது.

கால் நடைகள் நலம்பெற ஒரு கடவுள்

பொதுவாக நாமும் நம்மைச் சார்ந்தவர்களும் நோய்  நொடியின்றி ஆரோக்கியமாக் வாழவேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டிக் கொள்வோம்  ஆனால் ஒரு தலத்தில் பக்தர்கள் தங்கள் கால் நடைகளுக்கு ஏற்பட்டிருக்கும் நோய்கள் விரைவில் குணமாக வேண்டும்என்பதற்காகவும்  வேண்டிக்கொள்கிறார்கள். அந்தத் தலம் குட்டையூர். இங்கு மாதேஸ்வரர் என்னும் திரு நாமத்தில் சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் ஈசன்தான் பக்தர்களையும் கால் நடைகளைஉம் காத்தருள்கிறார்.
இங்குள்ள மலைப்பகுதியில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு மந்தையாக மேய்ந்து கொண்டிருந்த ஒரு மாடுகளில் ஒரு பசு மட்டும் தனியாக தினமும் எங்கோ சென்று வருவதை ஒரு நாள் கவனித்தார் அதன் உரிமையாளர்.

download (1)
ஒரு நாள் பசுவை பின் தொடர்ந்து சென்று பார்த்தபோது பாறைகளால் மூடப்பட்டு குகை போன்று காணப்பட்ட இடத்தில் சுயம்பு லிங்கத்தின் மேல் அப்பசு பால் சொரிவதைக் கண்டு மெய்சிலிர்த்தார். பின்னர் ஊர் மக்களுக்கும் விஷயம் தெரிவிக்கப்பட அவர்களும் இந்த அதிசயத்தைக் கண்டு ஆனந்தித்து அன்றிலிருந்து அதை வழிபடத் துவங்கினார்கள். தெய்வாம்சம் பொருந்திய அந்த இடத்தில் எழுந்தருளியிருந்த ஈசனை ஒரு காலத்தில் சித்தர்கள் பூஜித்து வந்ததாகவும் நம்பப்படுகிறது.

download (2)
300 வருடங்களுக்கு முன்பு இப்பகுதியைச் சேர்ந்த பக்தர்களின் ஒத்துழைப்போடு குகைக்கு அருகே ஆலயம் எழுப்பப்பட்டது. சுமார் இரு நூறு படிகளேறி மலைமேல் இருக்கும் கோவிலை அடையலாம். மாடு வழிபட்டதால் மூலவர் மாடேஸ்வரன் என்று அழைக்கப்பட்டு பின்னர் மாதேஸ்வராகி என்ரும் அவர் குடிகொண்ட மலை மாதேஸ்வரன் மலை என்றே அழைக்கப்பட்டு வருவதாகவும் சொல்கிறார்கள்.

download (3)
தாங்கள் வளர்க்கும் கால் நடைகள் நோயால் பாதிக்கப்பட்டால் மாதேஸ்வரரிடம் மனமுருக வேண்டி அங்கு தரப்படும் திரு நீறை எடுத்துச் சென்று அதற்கு பூசி கோயிலில் தரப்படும் தீர்த்தத்தை அதன் மீது தெளித்தால் நோய் குணமாகிறதாம். சமீபத்தில் கோமாரி நோயால் இப்பகுதி கால் நடைகள் பாதிப்புக்குள்ளானபோது பல விவசாயிகள் இத்தல இறைவனை பிரார்த்தித்து தங்கள் கால் நடைகளை காத்தனராம்.  கால் நடைகளுக்கு நோய் குணமானால் கோயிலுக்கு கருங்கல்லில் நந்தி உருவாரம் செய்து தருவதாக மாதேஸ்வரரிடம் வேண்டிக்கொள்ளும் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறியதும் தங்கள்  நேர்த்திக்கடனை செலுத்துவது வாடிக்கை.

download
விதை விதைத்தல் புது வீடு கட்டுதல் நிலம் வாங்குதல் திருமணம் உள்பட எந்த காரியமாக இருந்தாலும் இங்கு பூப்போட்டு சம்மதம் வாங்குவது ஒரு சடங்கு. பூ வரம் கேட்க இத்தலத்திற்கு வருபவர்கள் காலை நேரத்தில் வரவேண்டுமாம்.
அமாவாசை பிரதோஷம் கிருத்திகை போன்ற முக்கிய நாட்களிலும் திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளிலும் இங்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன,
பௌர்ணமியன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கிரிவலம் செல்கின்றனர். அவர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்படுகிறது. கார்த்திகை தீபத்தின்போது மாதேஸ்வரன் மலை உச்சியில் ஒரு வாரம் மகா தீபம் ஏற்றப்படுவது சிறப்பு. ஆண்டுதோறும் கனுமாட்டுப்பொங்கல் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அதிகாலை ஐந்து மணிக்கே நடை திறக்கப்பட்டு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

ஸ்ரீ நூக்காலம்மா

OLYMPUS DIGITAL CAMERA
ஆந்திர மானிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அனகாபல்லியில் அமைந்துள்ளது ஸ்ரீ நூக்காலம்மா ஆலயம். கருவறையில் சுதை வடிவத்தில் சுமார் 10 அடி உயரத்தில் வர்ணம் பூசப்பட்டு பக்தர்களுகு அருள்பாலிக்கிறாள் இந்த அம்பிகை. ஆந்திர மானிலத்தை சுமார் 250 ஆண்டுகள் ஆண்ட காகதீய மன்னர்களின் குலதெய்வம் இவள். ஒன்பது சக்தி வடிவங்களில் ஒன்றான அனகா தேவியே ஸ்ரீ நூக்காலம்பிகாவாக எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். அனகா தேவியின் பெயராலேயே இந்த ஊருக்கு அனகாபல்லி என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். அன்னியர் படையெடுப்புக்குப் பின் காகதீய மன்னர்கல் ஆட்சி இழந்ததை அடுத்து இந்த ஆலயம் பொலிவிழந்து பூஜை வழிபாடுகள் நின்று போயின.

Copy of ambika - Copy
விஜய நகர மன்னர்கள் காலத்தில் மீண்டும் இந்த ஆலயம் பொலிவு பெற்றது. அவர்கள் செல்வங்களை அள்ளித் தருபவல் என்ற பொருளில் நூக்காலம்மா என்ற பெயரில் வழிபட்டனர். தங்களின் வெற்றிக்கு இவளது கருணையே காரணம் என்றும் கருதினர். ஆலய முகப்பை ஐந்து கலசங்களைக் கொண்ட மூன்ரு நிலை ராஜகோபுரம் அலங்கரிக்கிறது. மிக விசாலமான பிராகாரங்களைக் கொண்டிருப்பினும் அந்தராளம் எனப்படும் உள் மண்டபம் மிகச் சிறியது. முதலில் ரௌத்ர ரூபிணியாக இருந்த தேவியை ஒரு மரத்தின் கீழ் வழிபட்டு வந்துள்ளனர். முன்மண்டபத்தில் சுதையில் தத்ரூபமாக வடிக்கப்பட்ட கிழக்கு நோக்கிய ஸ்ரீ மஹிஷாசுரமர்த்தினியும் சுற்றிலும் பிற தேவியர் திருவுருவங்களும் பக்தர்களின் கண்களைக் கவரும்படி உள்ளன. இங்குள்ள ஸ்ரீ சந்தான லக்ஷ்மியை வழிபட்டால் மகப்பேறு கிட்டும் என்பது நம்பிக்கை.

nookalamma12 - Copy
கருவறையில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள் ஸ்ரீ நூக்காலம்மா நுழைவாயிலில் இரண்டு புறங்களிலும் யாளிகல் மீது ஆரோகணித்த போர்வீரர்கள் கீழே யானைகள் சுதை சிற்பங்களாக உள்ளன.  பின் இடக்கரத்தில் சர்ப்பம் சுற்றிய டமருகம் பின் வலக்கரத்தில் திரிசூலம் முன் வலக்கரத்தில் வாள் முன் இடக்கரத்தில் குங்கும பாத்திரம் ஏந்தி இரு கால்களையும் கீழே தொங்கவிட்டு சிம்மாசனத்தின் மீது தேவி பெரிய உருவில் காட்சி தருகிறாள்.  கனிவான முகம் அகன்று விரிந்த கண்கள் பெரிய வெள்ளிக் கிரீடம் மலர் மாலைகள் மற்றும் தங்க ஆபரணங்களோடு காட்சி தருகின்ற தேவியின் விக்கிரகம் நவதாள் அமைப்பில் அமைந்துள்ளது. அதாவது தேவியின் முகத்திலிருந்து கால்வரை ஒவ்வொன்றும் 14 அங்குல அளவு கொண்ட ஒன்பது பாகங்களாக வடிக்கப்பட்டுள்ளன. தற்போது காட்சி தரும் ஸ்ரீ நூக்காலம்மா தேவி விக்கிரகம் 1969 ஆண்டு சோளவரம் எல்லய்யா என்ற சிற்பியால் செய்யப்பட்டது. தேவியின் சிலைக்கு ஆண்டு தோறும் புதிய வர்ணம் பூசப்படுகிறது.

maxresdefault - Copy
ஸ்ரீ நூக்காலம்மா தேவி உக்கிரகமாக இருப்பதால் அதை தணிக்கின்ற வகையில் கருவறையின் பின்புறம் செதுக்கப்பட்டுள்ள ஓம் என்ற எழுத்துக்களின் மீது பக்தர்கள்  வெண்ணெய் பூசுகின்றனர். ஒவ்வொரு காலை செய்யப்படும் பூஜைக்கு ஓங்கார பூஜை  என்றே பெயர்.

download (2) - Copyஞாயிறு செவ்வாய் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர் தெலுங்கு புத்தாண்டான யுகாதிக்கு முதல் நாள் வரும் அமாவாசை கொத்த அமாவாசை இந்த சமயத்தில் ஒடிசா சட்டீஸ்கர் மேற்கு வங்கம் போன்ற மானிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள்  இங்கு வந்து தேவியை வழிபடுகிறார்கள்.

Anakapalle-Sri Nookambika Ammavari Temple,-4 - Copy
ஒவ்வொரு ஆண்டும் தேவி ஆவிர்பவித்த நாளாகக் கருதப்படும் பால்குண அமாவாசையை ஒட்டி பிரம்மோத்சவம் நடைபெறுகிறது. கவர வம்சத்தினர் இங்க ஆலயத்தில் பரம்பரையாக பூஜை செய்து வருகின்றனர்.  லலிதா சஹஸ்ர நாமம் அஷ்டோத்திரம் போன்றவை பாராயணம் செய்யப்படுகின்றன. தீபாவளி மற்றும் நவராத்திரி நாட்களில் இந்த ஆலயத்தின் ஸ்ரீ மகாலட்சுமி பூஜை பிரத்யேகமாக நடைபெறுகிறது.
விசாகப்பட்டினத்திலிருந்து அனகாபல்லி சுமார் 40 கி மீ தூரத்தில்  உள்ளது.

Sunday, January 18, 2015

"Bon Appetit" with the flower parade Bloemencorso 

Even if all flowers are delayed here in the Netherlands with 2-3 weeks this spring due to the cold and longw inter the famous and lovely-smelling flower parade started last night in Noordwijkerhout. The topic this year was "Bon appetit" and as every year I was again impressed how created the artists are...enjoy my pictures, they made me smile even if I was freezing while taking them:-)))
Bloemencorso 2013 Holland
Bloemencorso 2013 Holland
Bloemencorso 2013 Holland
Bloemencorso 2013 Holland
Bloemencorso 2013 Holland
On the picture below you can see very well that the "banana" is made from daffodils and the monkey from purple hyacinths.