Sunday, October 12, 2014

சென்னையில் முப்பெருந்தேவியர்

னம் தரும் திருமகள், கல்வி தரும் கலைவாணி,  தளர்வறியா மனமும் தைரியமும் தரும் துர்காம்பிகை... இந்த முப்பெரும் தேவியரின் திருவருளே உலகின், உயிர்களின் இயக்கத்துக்கு அடிப்படை. இவர்களது வரம் கிடைத்தால் போதும், சகல சௌபாக்கியங்களிலும் பூரணத்துவம் பெற்றுவிடலாம்.

அப்படியான பாக்கியத்தை பக்தர்கள் பெறும் வகையில், முப்பெருந்தேவியரும் ஒருங்கிணைந்து அருள்பாலிக்கும் ஆலயங்களில் ஒன்று சென்னை, போரூர் மதனந்தபுரத்தில் உள்ளது. செவ்வாய், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முறையே ஸ்ரீதுர்கை, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீலட்சுமி தேவியருக்கான சிறப்பு பூஜைகள், மட்டைத்தேங்காய் சங்கல்பம், பௌர்ணமி பூஜை முதலான வைபவங்கள், இந்தக் கோயிலுக்கே உரிய சிறப்பம்சங்கள்!

No comments:

Post a Comment