Sunday, October 12, 2014

துர்க்கை அம்மனுக்கு நடத்தும் பூஜைகள் 




ஆதிசக்தியின் முதல் அம்சம் அபிராமி , இரண்டாம் அம்சம் ஸ்ரீ ராஜ ராஜேசுவரி , அடுத்து காமாட்சி ….. இவ்வாறாக அம்சங்கள் பிரிகின்றது.இவ்வரிசையில் இருக்கும் தெய்வங்கள் சாந்த தெய்வங்கள். சாந்தக் கோலத்தில் வீற்றிருந்து அருளாட்சி புரிபவர்கள்.

இரண்டாம் வரிசையில் மாகாளி அம்மன். இவர்கள் வரிசையில் சாந்தமும் , கோபமும் கொண்ட கோலத்தில் வீற்றிருப்பவர்கள். – ராகு, கேது இவ்விரு கிரக துன்பங்களையும் களைபவர்கள்.
மூன்றாம் வரிசையில் துர்க்கை , நாகம்மன் , போன்ற தெய்வங்கள்.


நாம் பார்க்கப் போவது துர்க்கையம்மனைப் பற்றி!

துன்பங்களை பிறருக்குக் கொடுப்பதில் ஈவு, இரக்கமின்றி செயல்படுபவர்களை , தான் வாழ பிறரைக் கெடுப்பவர்களை , துன்பத்திலாழ்த்தி மாய்ப்பதில் அசுர கிரகம் ராகு ஒரு போதும் அஞ்சுவதில்லை. 
பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சம் என்றடையும் போது , ராகுவால் வரக் கூடியத் துன்பங்களைக் களைவதில் முன்னிருப்பவர்கள் துர்க்கையம்மனும் , நாகம்மனும் தான்!

தன் குடும்ப நன்மைக்காக வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் , எலுமிச்சையில் இரு விளக்கு நெய் தீபமேற்றி, ஐந்து ஊதுவத்தி, மஞ்சள் சாமந்திப்பூ / மல்லிகைப்பூ / மஞ்சள் தூள் சமர்ப்பித்து ஏழு / ஒன்பது வாரங்கள் செய்து அடுத்த வாரம் அர்ச்சனை செய்து எலுமிச்சையில் இரு நெய் விளக்கேற்றுவது நன்மை தரும்.

தன் குடும்பத்தில் நோய் / தீரா நோயினால் பாதிக்கப் பட்டிருப்பின் , செவ்வாய்க் கிழமை ராகு காலத்தில் இரு நெய்விளக்கு எலுமிச்சம்பழத்தில் ஏற்றுவது நல்லது. தகுந்த மருத்துவ உதவி பற்றிய செய்தி அறிந்தவர் / அறியாதவர் வாயிலாக கேட்டுப் பலன் பெறவும் , நோயின் தீவிரம் குறைந்து படிப்படியான முன்னேற்றம் கிட்டும். 

தன் குடும்பப் பிரச்னைகள் / வம்பு / வழக்கு / கடன் என குடும்பத்தின் உறுப்பினர்களினால் ஏற்படக்கூடிய பிரச்னைகள் தீர ஞாயிற்றுக் கிழமை ராகு காலத்தில் விளக்கேற்றுவது பலன் தரும்.

பிரச்னைக்கு அடிப்படைக் காரணமான பழக்க வழக்கத்தை விடுவது , பழைய விஷயங்களைப் பேசிக் கொண்டிருப்பது, கடன் அடைக்க வழி தேடாமல் கடன் வாங்கிக் கொண்டே இருப்பது , சூதாட்டம் , மது , மாதுப் பழக்கத்தை விட்டொழிக்காமல் இருப்பது ….. இப்படி தேவையற்றப் பழக்கங்களை விடாமல் இருப்போருக்கு எத்தனை தெய்வங்களுக்கு பரிகாரம் செய்தாலும் பிரச்னைகள் தீருவது போல இருந்தாலும் மறுபடியும் மறுபடியும் தொடர்வதை தவிர்க்க இயலாது.

தீயப் பழக்கத்தைக் கைவிட்டு , தெய்வத்தை நம்பி , பரிகாரமாய் ( உண்மை சொல்வதென்றால் , நீங்கள் மாறுவதற்காக ஒரு கால அவகாசம் தெய்வத்தின் பெயரால் எடுத்துக் கொள்வதாய் எண்ணி – பரிகாரம் செய்வதாய் எண்ணி ) செய்யும் போது மகத்தான பலன் கிட்டும்.

நாகம்மனுக்கு பூஜைகள் செய்வதென்றால், மஞ்சள் தூளை சிலை / புற்றி மீது செலுத்தி , அர்ச்சனை செய்து , தேங்காய் மஞ்சள் வாழைப்பழத்தை முதியோருக்கு கொடுத்தல் வேண்டும். விளக்கு ஏழு விளக்கு ஏற்ற வேண்டும்.( புற்றுக் கோயில் – வாணியம்பாடி – பெங்களூர் சாலையின் நடுவிலே இக்கோயில் உள்ளது. மகத்தான பலன் கொடுக்கும் ஆலயம் இதுவாகும் )

துர்க்கையம்மன் கோயில் தனியாக இருக்கும் ஆலயங்களிலும் , சிவாலயங்களில் உள்ள துர்க்கை சன்னதியிலும் விளக்கு ஏற்றி வழிபடலாம்.

No comments:

Post a Comment