குன்னாண்டார் கோயில் (புதுக்கோட்டை) |
தமிழ் நாட்டின் கோயிற்கலையில் பிரமிக்க வைக்கும் தன்மையுடையன குடைவரை கோயில்கள். அந்த வரிசையில் இன்றைய வெளியீடாக மலர்வது புதுக்கோட்டைக்கு 35 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் குன்னண்டார் கோயில்.
பல்லவர் காலத்தில் கட்டப்பட்டு, பின்னர் சோழர் காலத்தில் விரிவாக்கப்பட்டு, பாண்டியர் காலத்தின் வரலாறுகளையும் கொண்டு, முத்தரையர்களின் ஆட்சியிலும் இருந்து பின்னர் நாயக்க மன்னர்களின் காலத்தில் மேலும் விரிவடைந்த ஒரு கோயில் இது. ஆலயத்தின் மூர்த்தி திருக்குன்றக்குடி மாதேவர் அல்லது திருக்குன்றக்குடி நாயனார் என்ற குறிப்பு இந்த ஆலயத்தில் உள்ள ராஜராஜ சோழனின் ஒரு கல்வெட்டில் காணக்கிடைக்கின்றது. இக்கோயிலுக்குத் தேவரடியார்கள் செய்த தொண்டுகளை விவரிக்கும் கல்வெட்டுக்களும் இக்கோயிலின் பல பகுதிகளிலும் மண்டபத்திலும் இடம் பெருகின்றன.
கோயில் முழுமைக்கும் 37 கல்வெட்டுக்கள் பல்வேறு காலகட்டத்தின் வரலாற்றுத் தகவல்களைத் தாங்கி நிற்கின்றன. தமிழகத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய வரலாற்றுச் சின்னங்களில் இதுவும் ஒன்று என்பதில் மறுப்பேதுமில்லை.
![]()
ரத மண்டபத்தின் வெளிப்புரத் தோற்றம்
![]()
பாறை
![]()
ரத மண்டபம் முன்புரத்தோற்றம்
![]()
8 பூதகணங்கள் - இவற்றில் ஏழு ஆண் பூதகணங்களும் ஒரு பெண் பூதகணமும் உள்ளது
![]()
நந்தி
![]()
கோயில் கோபுரத்தின் மேல்பகுதி
![]()
கோயில் வாயில் பகுதி - கோபுரத்துடன் இணைந்ததாக
![]()
கோபுரத்தின் மேல் பகுதியில் உள்ள பெண்டிர் சிலைகள்
விநாயகர் புடைப்புச் சிற்பம்
சிவன் - உமை புடைப்புச் சிற்பம்
![]()
கல்வெட்டு
![]()
கோயில் கட்டுமான வடிவம் வரையப்பட்ட நிலையில்
![]()
மன்னராக இருக்கலாம்
![]()
மன்னராக இருக்கலாம்
![]()
பாறை மேல் அமைந்திருக்கும் முருகன் கோயில்
![]()
பாறை மேல் அமைந்திருக்கும் முருகன் கோயில்
![]()
கல்வெட்டுக்கள்
![]()
கல்வெட்டுக்கள்
![]()
கல்வெட்டுக்கள்
![]()
பலிபீட அமைப்பு
![]()
பலிபீட அமைப்பு
![]()
பலிபீட அமைப்பு
![]()
பாறை மேல் உருவாக்கப்பட்ட நீர் செல்லும் வழி
![]()
பாறை
![]()
பாறைமேல் கீறப்பட்ட ஓவியம்
![]()
கோயிலின் சுவற்பகுதி
![]()
ரத மண்டபம்
|
No comments:
Post a Comment