Saturday, October 4, 2014

சனிபகவான் ஸ்தோத்திரம்

சனிபகவான் ஸ்தோத்திரம்
    காப்பு - வெண்பா

    தேவரெண்டிசைக்கதிபர் சித்தரொடு கிம்புருடர்
    மூவர் முனிவர் முதலோரை - மேவியுறுந்
    தாரணிந்த மார்பன் சனிபகவான் கதை புகலக்
    காரணிந்த யானைமுகன்-காப்பு

    1. ஆதிவே தாந்த முதலறிய ஞான
    மைந்தெழுத்தினுட் பொருளையயன் மாலோடு
    சோதி சிற்றம்பலத்தி லாடிகின்ற
    சுடரொளியை நீ பிடித்த தோஷத்தாலே
    பாதிமதி சடைக்கணிய வரவம்பூணப்
    பதியிழக்கச் சுடலைதனிற் பாடியாடச்
    சாதியில்லா வேடனெச் சிற்றின்ன வைத்த
    சனியனே காகமேறுந் தம்பிரானே

    2. வேலவனை வேங்கை மரமாக்கி வைத்தாய்
    விறகுகட்டிச் சொக்கர் தமை விற்க வைத்தாய்
    மாலினியை யுரலொடு கட்டுவித்தாய்
    வள்ளிதனைக்குறவரது வனத்தில் வைத்தாய்
    காலனை மார்க்கண்டனுக்காவரனுதைத்த
    காரணமும் நீபிடித்த கருமத்தாலே
    சாலவுனையான் றொழுதே னெனைத்தொடதே
    சனியனே காகமேறுந் தம்பிரானே

    3. மஞ்சுத வழயோத்தியில் வாழ்தசரதன் தன்
    மக்களையும் வனவாசமாக்கி வைத்தாய்
    பஞ்சவர்கள் சூதினால் பதியிழந்து
    பஞ்சுபடும் பாடவர் படச்செய்வித்தாய்
    எஞ்சலிலா வரிச்சந்திரன் பெண்டைவிற்றே
    யிழிகுலத்திலடி மையுற விசையவைத்தாய்
    தஞ்சமெனவுனைப் பணிந்தேனெனைத் தொடாதே
    சனியனே காகமேறுந் தம்பிரானே

    4. அண்டமாயிரத்தெட்டு மரசுசெய்த
    வடல்சூரபத்மனையு மடக்கிவைத்தாய்
    மண்டலத்தையாண்ட நளச்சக்கரவர்த்தி
    மனைவியோடு வனமதனி லலையச்செய்தாய்
    விண்டலத்தை பானுகோபன்றன்னாலே
    வெந்தணலாய்ச் சூரரை வெருவச்செய்தாய்
    தெண்டனிட்டே னெந்நாளு மெனைத்தொடாதே
    சனியனே காகமேறுந் தம்பிரானே

    5. அண்டர்கோன்மேனியிற் கண்ணாக்கி வைத்தாய்
    அயன்சிரத்தை வயிரவனாலறுக்க வைத்தாய்
    திண்டிறல்கொள் கௌதமனால கலிகைதான்
    சிலையாகவேசாப முறவேசெய்தாய்
    கண்டரள நகையிரதி மாரன் றன்றைச்
    சங்கரனார் நுதல்விழியிற் றணல்செய்வித்தாய்
    சண்டமிலா துனைத் தொழுதேனெனைத் தொடாதே
    சனியனே காகமேறுந் தம்பிரானே

    6. பாருலவுபரிதியைப் பல்லுதிரவைத்தாய்
    ப<ஞ்சவருக்குத்தூது பீதாம்பரனை வைத்தாய்
    தாருலவுவாலி சுக்ரீவன் தம்மைத்
    தாரையினாற்றீராத சமர்செய்வித்தாய்
    சூரனெ னுமிலங்கை ராவணன்றங்கை
    சூர்ப்பனகி மூக்குமுலை துணிசெய்வித்தாய்
    தாரணியு மணிமார்பா வெனைத்தொடாதே
    சனியனே காகமேறுந் தம்பிரானே

    7. சுக்ரன்றன் கண்ணிழந்தான் இலங்கையாண்டு
    துலங்குமி ராவணன் சிரங்கண்டிக்க வீழ்ந்தான்
    மிக்கபுகழிரணியன்றன் வீறழிந்தான்
    விளங்குதிரிபுராதிகளும் வெந்துமாண்டார்
    சக்கரத்தாலுடலறுத்தான் சலந்திரன்றான்
    தாருகாசுரனுமே சமரில் மாண்டான்
    தக்கன் மிகச் சிரமிழந்தா னின்றோஷத்தாற்
    சனியனே காகமேறுந் தம்பிரானே

    8. அந்தமுள ஐங்கரன் கொம்பரவே செய்தாய்
    அறுமுனிவர் மனைவிகள் கற்பழியச் செய்தாய்
    சந்திரன் தன் கலையழிந்து தழைக்கச் செய்தாய்
    சங்கரனைப் பிச்சை தானெடுக்கச் செய்தாய்
    தந்திமுகச் சூரனுயிர் தளரச்செய்தாய்
    சாரங்கதரன் கரத்தைத் தறிக்கச் செய்தாய்
    சந்ததமுமுனைப் பணிவேனெனைத் தொடாதே
    சனியனே காகமேறுந் தம்பிரானே

    9. சீதைதனையிரா வணனாற் சிறைசெய்வித்தாய்
    தேவர்களைச்சூரனாற் சிறைசெய்வித்தாய்
    மாதுதுரோபதை துயிலை வாங்குவித்தாய்
    மகேச்சுரனையுமைபிரியும் வகைசெய்வித்தாய்
    போதிலயன் றாளிற்றளை பூட்டுவித்தாய்
    பொதிகையினிலகத்தியனைப் பொருந்தச் செய்தாய்
    தாதுசேர்மலர்மார்பா வெனைத் தொடாதே
    சனியனே காகமேறுந் தம்பிரானே

    10. அப்பர் தமைக்கருங்கல்லோ டலையிற்சேர்த்தாய்
    அரனடியில் முயல்களை யடங்கச்செய்தாய்
    செப்புமாணிக்கர் தமைச் சிறையிலிட்டாய்
    ஸ்ரீராமனைமச்சவுரு வெடுக்கச் செய்தாய்
    ஓப்பிலனுமான் வாலிலொளி தீயிட்டாய்
    ஒலிகடலினஞ்சையர னுண்ணவைத்தாய்
    தப்பிலா துனைத்தொழுதேனெனைத் தொடாதே
    சனியனே காகமேறுந் தம்பிரானே

    11. நீரினையுண்டேழுமேக வண்ணா போற்றி
    நெடுந்தபத்திலறு கமலக்கண்ணா போற்றி
    சூரியன் தவத்தில் வந்த பாலா போற்றி
    துலங்கு நவக்கிரகத்துண் மேலா போற்றி
    காரியன் பெயர்களுப காரா போற்றி
    காசினியிற் கீர்த்திபெற்ற தீரா போற்றி
    மூரிகொளு நோய்மகவாமுடவா போற்றி
    மூதுமகனின் முண்டகத்தாள் போற்றி போற்றி

    No comments:

    Post a Comment