Thursday, October 9, 2014

தசரத மன்னன் இயற்றிய சனி பகவான் ஸ்தோத்ரம்


 தசரத மன்னன் சனி பகவானை பதித்துச் செய்த ஸ்தோத்திரம் மிக்க சக்தி வாய்ந்தது. அவர் எதற்காக இதை இயற்றினார் என்பதற்கு ஒரு வரலாறு உண்டு.

ரகுவம்சத்தின் தசரதன் (ஸ்ரீ ராமபிரானின் தந்தை) பூவுலகை ஆண்ட போது  ஒரு சங்கடமான நிலை உண்டாயிற்று. அரசவை ஜோதிடர்கள் சனிபகவான் ரோஹிணி நட்சத்திரத்தின் சகடத்தை உடைத்துக் கொண்டு சஞ்சாரம் செய்யப்போவதால் பன்னிரெண்டு வருடம் நாட்டில் மழை  பெய்யாது. நீர் வற்றிப்பஞ்சம் ஏற்படும். தானிய விளைவு இருக்காது. உயிர்கள் அனைத்தும் பட்டினியால் மடிந்து விடும் என்று கூறினார்கள்.

உடனே தசரதன் தனது மந்திரிமார்களுடனும் வசிஷ்டர் முதலிய முனிவர்களுடனும் ஆலோசனை செய்தார். சனிபகவானோடு தசரதன் போரிட்டு அவர் ரோஹினி நட்சத்திரத்தை உடைக்காமல் தடுக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.

அற்புதமான ரதத்தில் ஏறி சனி பகவானுடன் போர் தொடுக்கப் புறப்பட்டார் தசரதன். சனி பகவான் மேல் தனது அம்பைச் செலுத்தினார்.

இதைக் கண்ட சனி பகவான் யாராலும் மாற்றப்பட முடியாத தன்னுடைய சஞ்சாரத்தை மாற்றுவதற்கு ஒரு மனிதகுல மன்னனான தசரதன் முயற்சி செய்வதை அறிந்து தசரதனின் அறியாமையை எண்ணிச் சிரித்தார்.

ஆனாலும் சுயநலம் கருதாமல் நாட்டு மக்களின் நலம் ஒன்றே பிரதானம் எனக்கருதி, யாராலும் வெற்றி கொள்ள முடியாத தன்னோடு போரிட வந்த  தசரதனின் மேன்மை கண்டு அவரை மெச்சியவாறே "தசரதா, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என்றார்.

உடனே தசரதன் , "நாட்டில் தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் கஷ்டங்கள் வராமல் தவிர்க்கப்பட வேண்டும். இது ஒன்றே என் கோரிக்கை" என்று பணிந்தார்.

உடனே "அவ்வாறே தருகிறேன்" என்று வரமளித்த ஸ்ரீ சனிபகவானைத் துதித்து அவர் மேல் ஸ்தோத்ரம் ஒன்றைப் பாடினார் தசரதன்.

அதுகேட்டு மகிழ்ந்த ஸ்ரீ மகிழ்ந்த ஸ்ரீ சனி பகவான் "இத்தோத்திரத்தைத் சொல்லி என்னைச் துதிப்பவர்க்கு என்னால் துன்பமே வராது" என்று அருள் செய்தார். 




அந்த ஸ்தோத்ரம் வருமாறு:

நம: கிருஷ்ணாய நீலாய ஸிதிகண்டநியாய சநமோ நீலமயூகாய நீலோத்பல நியாய ச 
நமோ நிர்மாம்ஸ தேஹாயா தீர்கஸ்ருதி ஜடாய ச
நமோ விஸாலநேத்ராய சுஷ்கோதர பயானக

நம: பெளருஷகாத்ராய ஸ்தூலரோம்ணேச தே நம:
நமோ நித்யம் தார்தாய ஹ்யத்ருப்தாய சதே நம:
நமோ கோராய ரெளத்ராய பிஷணாய கரானிதே
நமோ திர்காய சுஷ்காய காலடம்ஷ்டர நமோஸ்துதே

நமஸ்தே கோரருபாய துர்நிரீக்ஷ்யாய தே நம:
நமஸ்தே ஸர்வபக்ஷாய வலீமுக நமோஸ்துதே
ஸூர்யபுத்ர நமஸ்தேஸ்து பாஸ்கரே பயதாயினே
அதோ த்ருஷ்டே நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்துதே

நமோ மத்தகதே துப்யம் நிஷ்ப்ரபாய நமோ நம:
தபனாஜ் ஜாததே ஹாய நித்யயோகதராய ச
ஞானசக்ஷுர் நமஸ்தேஸ்து காஸ்பாத்மஜஸூனவே

துஷ்டோ ததாஸி ராஜ்யம் த்வம் கருத்தோ
தேவா ஸுரமானுஷ்யாஸ்ச ஸித்தவி த்யாதரோரகா:
த்வயாவலோகிதாஸ்ஸர்வே தைத்யாமாஸு வ்ரஜத்தி தே
பிரம்மா சுக்ரோ யமஸ்சைவ முனயஸ்ஸப்ததாரகா:
ராஜ்யப்ரஷ்டா: பதந்தீஹ தவ த்ருஷ்ட்யாவலோகிதா

த்வயாவலோகிதஸ்தேபி நாஸம் யாந்தி ஸமுலத:
ப்ரஸாதம் குரு மே ஸெளரே ப்ரணத்யா ஹி த்வ மர்த்தித:
ஏவம் ஸ்துதஸ்ததா ஸெளரி: க்ரஹராஜோ மஹாபல:
அப்ரவீஸ்ச சனிர்வாக்யம் ஹ்ருஷ்டரோமா ஸ பாஸ்கரி

ப்ரீதோஸ்மிதவ ராஜேந்த்ர ஸ்தோத்ரேணாநேந ஸ்ம்ப்ரதி!
அதேயம் வா வ ரம் துப்யம்ப்ரீதோஹம் ப்ரததாமி ச!!
த்வயா க்ருதம் து யத் ஸ்தோத்ரம் ய: படேதிஹ மாநவ!
ஏகவாரம் த்விவாரம் வா பீடாம் முஞ்சாமி தஸ்ய வை !!
ம்ருத் யுஸ் தாநக தே வாபி ஜந்மஸ்தாநகதேபி வா!!
ய: புமாந் ஸ்ரத்தயா யுக்த: ஸுசி: ஸ்நாத்வா ஸமாஹித:!!
ஸமீபத்ரை: ஸமப்யர்ச்ய ப்ரதிமாம் லோஹஜாம் மம!
மாஷோட நம் திலைர் மிஸ்ரம் தத்யால் லோஹம் து தக்ஷிணாம்!!
க்ருஷ்ணாம் காம் மஷிஷீம் வஸ்த்ரே மாமுத்திஸ்ய த்விஜாதயே!!
மத்திநேது விஸேஷேண ஸ்தோத்ரரேணாநேந பூஜயேத்!!

No comments:

Post a Comment