Wednesday, October 1, 2014

அன்னையே வருக...



அன்னையே வருக அமுதே வருக

பொன்னே வருக பொலிவாய் வருக

அம்பிகையே உன் அழகுடன் வருக

நம்பின பேருக்கு நாயகி வருக


எங்கும் நிறைந்தொளிர் இறைவீ வருக

பொங்கும் அருள்மொழி புங்கவி வருக

சங்கரி வருக சாம்பவி வருக

மங்களமே தர மாண்பாய் வருக


திவ்விய மாயவன் தேவீ வருக

செவ்விய ஒளிதர சீருடன் வருக

குசுமாம்கையாம் குணமலை வருக

வசுமுதலோர் தொழும் வாசவி வருக


எங்கள் பராபரி ஈஸ்வரி வருக

தங்கிடும் இன்பம் தருவோய் வருக


கலைமகளே நீ சடுதியில் வருக

மலைமகளே நீ மகிழ்வுடன் வருக


நிலைமகளே நீ நேர்த்தியாய் வருக

அலர்மகளே நீ அன்புடன் வருக

எங்குல மணியே எழிலுடன் வருக

எண்ணில் நலம் தரும் இன்பமே வருக .

No comments:

Post a Comment