Thursday, October 9, 2014






நாமக்கல்லிலிருந்து கொல்லிமலை போகும் பாதையில் சேந்தமங்கலம் என்னும் ஊரில் சாமியார்கரடு என்னும் பகுதியில் தத்தகிரி முருகன் கோவில் சிறுகுன்றின் மேல் இருக்கிறது. சேங்காலி புரத்தில் இருப்பதுபோல இங்கும் தத்தாத்ரேயர் சந்நிதி இருக்கிறது. அதன்கீழ் மண்டபத்தில் சுயம்பிரகாச சுவாமிகள் என்னும் அவதூதர் ஜீவசமாதியாக விளங்குகிறார். ஏழடி உயரத்தில் தட்சிணாமூர்த்திக்கு தனிச் சந்நிதி உண்டு. ஏழரை அடி உயரத்தில் சனீஸ்வரரும் அவருக்கு எதிரில் ஏழடி உயரத்தில் பஞ்சமுக ஆஞ்சனேயரும் காட்சியளிக் கிறார்கள். இங்கு சென்று வழிபடுவதால் சனியின் பிடியும் தளரும்; குருவின் திருவருளும் மலரும்.


No comments:

Post a Comment