Thursday, October 9, 2014

கடன் நிவர்த்தியாகும்; தொழில் மேன்மையடையும்.

ராஜபாளையத்திலிருந்து தென்காசி போகும் பாதையில் வாசுதேவ நல்லூருக்கு அருகில் தாருகாபுரம் என்னும் ஊரில் மத்தியஸ்த நாதர் கோவில் இருக்கிறது. சுவாமி மத்தியஸ்த நாதர், அம்பாள் அகிலாண்டேஸ்வரி. திருவானைக்கா கோவில்போல இந்தப் பகுதியில் பஞ்சமுக ஸ்தலங்களில் சுக்கிரன் ஸ்தலமாகும். சிவன் சந்நிதி பிராகாரத்தில் நவகிரக தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். நவ கிரகங்களும் சனகாதி நால்வரும் தட்சிணாமூர்த்தி விக்ரகத்தில் இருக்கிறது. தேய்பிறை அஷ்டமி அன்று பைரவருக்கு நெய்தீபம் ஏற்றப்படுகிறது. ஒவ்வொரு பௌர்ணமிதோறும் மாலை ஆறு மணியளவில் திருவண்ணாமலையைப்போல இங்கும் கிரிவலம் நடக்கிறது. நோய் விலகும்; கடன் நிவர்த்தியாகும்; தொழில் மேன்மையடையும்.

No comments:

Post a Comment