Thursday, October 9, 2014


சென்னை- அம்பத்தூர் செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில் பாடி என்னும் ஊர் இருக்கிறது. இதுவே திருவலிதாயம் எனப்படும். இங்குள்ள ஈசன் வலிதாய நாதர். திருஞானசம்பந்தப் பெருமானால் பாடல் பெற்ற ஸ்தலம். இங்கு தட்சிணாமூர்த்திக்குப் பெருமையும் சிறப்பும் உண்டு. சென்னைக்கு வடக்குப்புறம் 10 கி.மீ. தொலைவில் திருவொற்றியூர் இருக்கிறது. பட்டினத்தார் ஜீவசமாதியான இடம். வடலூர் வள்ளலார் இங்கு தங்கியிருந்தார். ஈசன் தியாகராஜப் பெருமான், அம்பாள் வடிவுடையம்மன். இங்குள்ள குரு தட்சிணாமூர்த்தி அருள் நிறைந்தவர். 27 நட்சத்திரத்திற்கும் 27 சிவலிங்க மூர்த்திகள் உள்ளன. அவரவர் நட்சத்திர லிங்கத்திற்கு அர்ச்சனை செய்வது சிறப்பு.


No comments:

Post a Comment