Wednesday, October 8, 2014

நாகூர் ஸ்ரீநாகநாதர் திருக்கோயில்

நாகர் ஊர் எனப்படும் நாகூரில் வீற்றிருக்கும் அருள்மிகு நாகவள்ளி உடனுறை ஸ்ரீநாகநாதரை வணங்குங்கள். நாகர்களுக்கு எதிரான யாகங்கள் நடந்தபோது லட்சக்கணக்கான நாகங்கள் யாக நெருப்பில் விழுந்து மடிந்தன. இதனை காப்பாற்ற நினைத்து நாகராஜனான ஆதிசேஷன் சிவபெருமானை பூசை செய்து அருள் பெற்ற திருத்தலமே நாகூர்.    இங்கு கோயில் பிரகாரத்தில் ஸ்ரீஆதிசேஷன் சிவபெருமானை பூசை செய்வதற்கான சாட்சிகள் உள்ளன. இங்குள்ள ஈசனை வணங்கினால் பெரிய பதவிகள் கிடைக்கும். 

No comments:

Post a Comment