Thursday, October 9, 2014

கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் போகும் பாதையில் குடவாசல் என்னும் ஊர் இருக்கிறது. அங்கிருந்து நான்கு கி.மீ. தொலைவில் சேங்காலிபுரம் என்னும் கிராமம் உள்ளது. அங்கு தத்த குடீரம் என்னும் கோவிலில் தத்தாத் ரேயரைத் தரிசிக்கலாம். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் ஒன்று சேர்ந்த தோற்றம்தான் தத்தாத்ரேயர். இங்கு கார்த்தவீர்யார்ஜுன யந்திரம் இருக்கிறது. அதைப் பூஜிப்பதால் காணாமல் போன பொருள்கள் கிடைக்கும். வர வேண்டிய பாக்கிகள் வசூல் ஆகும். விசுவாசமுள்ள வேலைக்காரர்கள் அமை வார்கள். களவு போகாது. கார்த்தவீர் யார்ஜுன யந்திரம் மட்டுமே இங்கு பிரதிஷ்டை. வாலாஜா பேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் கார்த்தவீர்யார் ஜுனருக்கு மரகதக் கல்லில் (பச்சைக் கல்லில்) உருவச் சிலையே வைத்திருக்கிறார்கள். உலகத்திலேயே இங்கு தவிர வேறு எங்குமே கார்த்தவீர்யார்ஜுனருக்கு சிலை இல்லை. சேங்காலிபுரத்தில் பிரம்ம பூத ராமானந்த பிரம்மேந்திர சுவாமிகள் ஜீவ சமாதியாக விளங்குகிறார். இந்த ஊருக்குச் சென்றால் குருவருளும் திருவருளும் சேர்ந்து கிடைக்கும். வருடம் தோறும் கார்த்திகை மாதப் பௌர்ணமியை ஒட்டி தத்த ஜெயந்தி உற்சவமும் தொட்டில் உற்சவமும் நடைபெறும். அதில் கலந்து கொள்ளும் சுமங்கலிப் பெண்களுக்கு ஆண் வாரிசு கிடைக்கும். 

1 comment: