ஸ்ரீ அர்தநாரீஸ்வரர் திருக்கோயில்
60 அடி நீளத்தில் ஐந்து தலை நாகத்தின் சிலை கோயில் படிக்கட்டு அருகில் உள்ளது.நாக தோஷம் ராகு தோஷம் காலசர்ப தோஷம் களத்ர தோஷம் அவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர். 60 படிக்கட்டுகள் அமைந்துள்ளன. இப்படிக்கட்டில் பல வழக்குகள் தீர்க்கப்பட்டு உள்ளன. இதனை சத்தியப் படிக்கட்டுகள் எனப்படுகின்றன. இந்த மலையில் ஏற மொத்தம் 1200 படிக்கட்டுகள் உள்ளன. 1901 அடி உயரம் கொண்டது. இந்த மலைக்கு எதிரில் நந்தி அமைந்துள்ளது. அர்த்தநாரீஸ்வரரை முலவராகக் கொண்ட இம்மலையில் ஸ்ரீதேவி பூதேவியருடன் ஆதிகேசவப் பெருமாள் அருளுகிறார்.
இருப்பிடம்
நாமக்கல்லில் இருந்து 30 கி;.மீ தொலைவில் திருச்செங்கோடு அமைந்துள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் கோயில் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment