Tuesday, November 11, 2014



Thiruneeru pathigam

                          திருச்சிற்றம்பலம்

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயன் திருநீறே.


வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதம் தருவது நீறு புண்மைதவிர்ப்பது நீறு
ஓதத்தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திரு ஆலவாயன் திருநீறே.


முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே.


காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந்  தகைவது நீறு மதியைத்  தருவது நீறு
சேணந்  தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே.


பூச இனியது நீறு புண்ணியமாவது நீறு
பேச இனியது நீறு பெருந் தவத்தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தமாதாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திரு ஆலவாயான் திருநீறே.


அருத்தமதவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தமதாவது  நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே


எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவணமாவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவணமாவது நீறு தத்துவமாவது நீறு
அரா வணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே.

மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு
ஆலமது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே.

குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும்  கூடக்
கண் திகைப்பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப்பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு
அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே.

ஆற்றல் அடல்விடையேறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்
தேற்றித் தென்னன் உடல் உற்ற திப்பிணியாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.

                             திருச்சிற்றம்பலம்


THIRUMURAI - SIVAPURANAM


திருச்சிற்றம்பலம்


நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35
வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55
விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65
பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95
திருச்சிற்றம்பலம்




KOLARU PATHIKAM


திருச்சிற்றம்பலம்


வேய் உறு தோளி பங்கன், விடம் உண்ட கண்டன்,
மிக நல்ல வீணை தடவி,
மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்தஅதனால்---
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழம், வெள்ளி,
சனி, பாம்புஇரண்டும், உடனே
ஆசு அறும்; நல்லநல்ல; அவை நல்லநல்ல,
அடியார்அவர்க்கு மிகவே.
என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க,
எருது ஏறி, ஏழைஉடனே,
பொன் பொதி மத்தமாலை புனல் சூடி வந்து, என்
உளமே புகுந்தஅதனால்---
ஒன்பதொடு, ஒன்றொடு, ஏழு, பதினெட்டொடு, ஆறும்,
உடன்ஆய நாள்கள்அவைதாம்,
அன்பொடு நல்லநல்ல; அவை நல்லநல்ல,
அடியார்அவர்க்கு மிகவே.
உரு வளர் பவளமேனி ஒளி நீறு அணிந்து,
உமையோடும், வெள்ளைவிடைமேல்,
முருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்தஅதனால்---
திருமகள், கலைஅதுஊர்தி, செயமாது, பூமி,
திசைதெய்வம்ஆனபலவும்,
அரு நெதி நல்லநல்ல; அவை நல்லநல்ல,
அடியார்அவர்க்கு மிகவே.
மதிநுதல் மங்கையோடு, வடபால் இருந்து
மறை ஓதும் எங்கள் பரமன்,
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்தஅதனால்---
கொதிஉறு காலன், அங்கி, நமனோடு தூதர்,
கொடுநோய்கள்ஆனபலவும்,
அதிகுணம் நல்லநல்ல; அவை நல்லநல்ல,
அடியார்அவர்க்கு மிகவே.
நஞ்சு அணி கண்டன், எந்தை, மடவாள்தனோடும்
விடை ஏறும் நங்கள் பரமன்,
துஞ்சு இருள்---வன்னி, கொன்றை, முடிமேல் அணிந்து---என்
உளமே புகுந்தஅதனால்---
வெஞ்சின அவுணரோடும், உரும்-இடியும், மின்னும்,
மிகைஆன பூதம்அவையும்,
அஞ்சிடும்; நல்ல நல்ல; அவை நல்லநல்ல,
அடியார்அவர்க்கு மிகவே.
வாள்வரிஅதள்அது ஆடை வரி கோவணத்தர்
மடவாள்தனோடும் உடன்ஆய்,
நாள்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து, என்
உளமே புகுந்தஅதனால்---
கோள் அரி, உழுவையோடு, கொலை யானை, கேழல்,
கொடு நாகமோடு, கரடி,
ஆள் அரி, நல்லநல்ல; அவை நல்லநல்ல,
அடியார்அவர்க்கு மிகவே.
செப்புஇளமுலை நல் மங்கை ஒருபாகம்ஆக
விடை ஏறு செல்வன், அடைவு ஆர்
ஒப்பு இளமதியும் அப்பும் முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்தஅதனால்---
வெப்பொடு, குளிரும், வாதம், மிகைஆன பித்தும்,
வினைஆன, வந்து நலியா;
அப்படி நல்லநல்ல; அவை நல்லநல்ல,
அடியார்அவர்க்கு மிகவே.
வேள் பட விழிசெய்து, அன்று, விடைமேல் இருந்து,
மடவாள்தனோடும் உடன்ஆய்,
வாள்மதி வன்னி கொன்றைமலர் சூடி வந்து, என்
உளமே புகுந்தஅதனால்---
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன்தனோடும்
இடர்ஆன வந்து நலியா;
ஆழ் கடல் நல்லநல்ல; அவை நல்லநல்ல,
அடியார்அவர்க்கு மிகவே.
பலபலவேடம் ஆகும் பரன், நாரிபாகன்,
பசு ஏறும் எங்கள் பரமன்,
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்தஅதனால்---
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர்
வரு காலம்ஆனபலவும்,
அலைகடல், மேரு, நல்ல; அவை நல்லநல்ல,
அடியார்அவர்க்கு மிகவே.
கொத்து அலர் குழலியோடு விசயற்கு நல்கு
குணம்ஆய வேட விகிர்தன்,
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்தஅதனால்---
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே;
அத்தகு நல்லநல்ல; அவை நல்லநல்ல,
அடியார்அவர்க்கு மிகவே.
தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி,
வளர் செம்பொன் எங்கும் நிகழ,
நான்முகன் ஆதிஆய பிரமாபுரத்து
மறைஞான ஞானமுனிவன்,
தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல்மாலை ஓதும் அடியார்கள், வானில்
அரசு ஆள்வர்; ஆணை நமதே.

திருச்சிற்றம்பலம்


                   
                   விநாயகர் அகவல்



விநாயகர் அகவல்
எழுதியவர்: ஔவையார்



சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)


விநாயகர் அஷ்டோத்தரம்


ஓம் விநாயகாய நம
ஓம் விக்நராஜாய நம
ஓம் கௌரீ புத்ராய நம
ஓம் கணேச்வராய நம
ஓம் ஸ்கந்தாக்ரஜாய நம
ஓம் அவ்யயாய நம
ஓம் பூதாய நம
ஓம் தக்ஷாய நம
ஓம் அத்யக்ஷாய நம
ஓம் த்விஜப்ரியாய நம
ஓம் அக்நிகர்ப்பச்சிதே நம
ஓம் இந்த்ரச்ரீப்ரதாய நம
ஓம் வாணீப்ரதாய நம
ஓம் அவ்யயாய நம
ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம
ஓம் சர்வநயாய நம
ஓம் சர்வரீப்ரியாய நம
ஓம் ஸர்வாத்மகாய நம
ஓம் ஸ்ருஷ்டி கர்த்ரே நம
ஓம் தேவாய நம
ஓம் அநேகார்சிதாய நம
ஓம் சிவாய நம
ஓம் சுத்தாய நம
ஓம் புத்திப்ரியாய நம
ஓம் சாந்தாய நம
ஓம் ப்ரஹ்மசாரிணே நம
ஓம் கஜாந நாய நம
ஓம் த்வை மாத்ரேயாய நம
ஓம் முநிஸ்துத்யாய நம
ஓம் பக்தவிக்நவி நாசகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் சதுர் பாஹவே நம
ஓம் சதுராய நம
ஓம் சக்திஸம்யுதாய நம
ஓம் லம்போத ராய நம
ஓம் சூர்பகர்ணாய நம
ஓம் ஹரயே நம
ஓம் பிரஹ் மவிதுத்தமாய நம
ஓம் காலாய நம
ஓம் க்ரஹபதயே நம
ஓம் காமிநே நம
ஓம் ஸோமசூர்யாக்நிலோசநாய நம
ஓம் பாசாங்குச தராய நம
ஓம் சண்டாய நம
ஓம் குணாதீதாய நம
ஓம் நிரஞ்ஜநாய நம
ஓம் அகல் மஷாய நம
ஓம் ஸ்வயம்ஸித்தாய நம
ஓம் ஸித்தார்ச்சிதபதாம் புஜாய நம
ஓம் பீஜ பூர பலா ஸக்தாய நம
ஓம் வரதாய நம
ஓம் சாக்வதாய நம
ஓம் க்ருதிநே நம
ஓம் த்விஜப்ரியாய நம
ஓம் வீதபயாய நம
ஓம் கதிநே நம
ஓம் சக்ரிணே நம
ஓம் இக்ஷúசாபத்ருதே நம
ஓம் ஸ்ரீ தாய நம
ஓம் அஜாய நம
ஓம் உத்பலகராய நம
ஓம் ஸ்ரீ பதயே நம
ஓம் ஸ்துதிஹ்ஷிதாய நம
ஓம் குலாத்ரிபேத்ரே நம
ஓம் ஜடிலாய நம
ஓம் கலிகல் மஷநாசகாய நம
ஓம் சந்த்ர சூடாமணயே நம
ஓம் காந்தாய நம
ஓம் பாபஹாரிணே நம
ஓம் ஸமாஹிதாய நம
ஓம் ஆச்ரி தச்ரீகராய நம
ஓம் ஸெளம்யாய நம
ஓம் பக்தவாஞ்சி தாயகாய நம
ஓம் சாந்தாய நம
ஓம் கைவல்யஸுகதாய நம
ஓம் ஸச்சிதாநந்த விக்ரஹாய நம
ஓம் ஜ்ஞாநிநே நம
ஓம் தயாயுதாய நம
ஓம் தாந்தாய நம
ஓம் ப்ரஹ்மத்வேஷவிவர்ஜிதாய நம
ஓம் ப்ரமத்த தைத்ய பயதாய நம
ஓம் ஸ்ரீ கண்டாய நம
ஓம் விபுதேச்வராய நம
ஓம் ரமார்ச்சிதாய நம
ஓம் விதயே நம
ஓம் நாகராஜ யஜ்ஞோபவீதகாய நம
ஓம் ஸ்தூலகண்டாய நம
ஓம் ஸ்வயம் கர்த்ரே நம
ஓம் ஸாமகோஷ ப்ரியாய நம
ஓம் பரஸ்மை நம
ஓம் ஸ்த்தூல துண்டாய நம
ஓம் அக்ரண்யை நம
ஓம் தீராய நம
ஓம் வாகீசாய நம
ஓம் ஸித்திதாயகாய நம
ஓம் தூர்வாபில்வ ப்ரியாய நம
ஓம் அவ்யக்த மூர்த்தயே நம
ஓம் அத்புதமூர்த்திமதே நம
ஓம் சைலேந்த்ரநுஜோத்ஸங்க நம
ஓம் கேலநோத்ஸுகமா நஸாய நம
ஓம் ஸ்வலாவண்ய நம
ஓம் ஸுதாஸாராய நம
ஓம் ஜிதமந்மத விக்ரஹாய நம
ஓம் ஸமஸ் தஜகதா தாராய நம
ஓம் மாயிநே நம
ஓம் மூஷிகவாஹ நாய நம
ஓம் ஸ்ருஷ்டாய நம
ஓம் துஷ்டாய நம
ஓம் பிரஸந் நாத்மநே நம
ஓம் ஸர்வஸித்திப்ரதாயகாய நம

விநாயகர் அஷ்டோத்தரம் முற்றும்



கந்த சஷ்டி கவசம்

காப்பு

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

நூல்

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட

மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
வாசவன் முருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக

ரவண பவச ர ர ர ர ர ர ர
ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விபச சரவண வீரா நமோநம
நிபவ சரவண நிறநிற நிறென

வசுர வணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்

பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்

கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!

ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்பரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றூந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்

இறுதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு ட ங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோ தனென்று

உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
எந்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளி ரண்டும் கருணைவேல் காக்க

முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

ஆனை யடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட் டலறி மதிகெட் டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெகுண்டது வோடப்

புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழு உலகமும் எனக் குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா

மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே

பரிபுர பவனே பவமொளி பவனே
அரிதிரு மருகா அமரா வதியைக்
காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே

கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தனிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா


பழநிப் பதிவாழ் பாலகு மாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே

காரார் குழலால் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக

ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை
நேச முடன்யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக

அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமுந்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்

வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதும் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி

நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய


ஓதியே செபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்
திசைமன்ன ரண்மர் சேர்ந்தங்கு அருளுவர்
மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை

வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வ சத்ரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளும் அஷ்ட லட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த

குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!

தேவர்கள் சேன பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!
இடும்பா யுதனே இடும்பா போற்றி!

கடம்பா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேளே போற்றி!
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
மயில்நட மிடுவாய் மலரடி சரணம்!

சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!



ஸ்ரீ ஸப்த மாதாக்களுக்கு உரிய 

   காயத்ரி மந்திரங்கள்...


ப்ராம்ஹி..

ஓம் ஹம்ஸ யுக்தாய வித்மஹே
மஹா சக்தியைச தீமஹி
தந்நோ ப்ராம்ஹீ: ப்ரசோதயாத்||

மாஹேஸ்வரி..

ஓம் மஹா தேவ்யைச வித்மஹே
ருத்ர பத்னியைச தீமஹி
தந்நோ மாஹேஸ்வரி: ப்ரசோதயாத்||

கௌமாரி..
ஓம்சக்தி தராயை வித்மஹே
காமரூபாயை தீமஹி
தந்நோ கௌமாரி: ப்ரசோதயாத்||

வைஷ்ணவி..

ஓம் கதாஸங்கராயை வித்மஹே
மஹாவல்லபாயை தீமஹி
தந்நோ வைஷ்ணவீ: ப்ரசோதயாத்||

வாராஹி..

ஓம் உக்ர ரூபாயை வித்மஹே
தம்ஷ்ட்ராகாரன்யை தீமஹி
தந்நோ வாராஹீ: ப்ரசோதயாத்||

இந்த்ராணி..

ஓம் மஹர் வஜ்ராயை வித்மஹே
ஸஹஸ்ர நயநாயை தீமஹி
தந்நோ இந்த்ராணீ: ப்ரசோதயாத்||

சாமுண்டி..

ஓம் கராள வதநாயை வித்மஹே
சிரோமலாயை தீமஹி
தந்நோ சாமுண்டீ: ப்ரசோதயாத்||





 ஸப்த ரிஷி பத்தினிகளுக்கு உரிய 

காயத்ரி மந்திரங்கள்...


ஸ்ரீ அதிதி தேவி..

ஓம் மஹா தேவ்யைச வித்மஹே
ஆத்ம காஸ்யப பத்னியைச தீமஹி
தந்நோ அதிதி: ப்ரசோதயாத்||

ஸ்ரீ அனுசூயா தேவி..

ஓம் வேதாத்மன்னியை வித்மஹே
அத்ரி பத்னியைச தீமஹி
தந்நோ அனுசூயா: ப்ரசோதயாத்||

ஸ்ரீ சுகிலா தேவி..

ஓம் மஹா சக்தியைச வித்மஹே
பரத்வாஜ பத்னியைச தீமஹி
தந்நோ சுசிலா: ப்ரசோதயாத்||

ஸ்ரீ குமுத்வதி தேவி..

ஓம் மஹா தேவ்யைச வித்மஹே
விஸ்வாமித்ர பத்னியைச தீமஹி
தந்நோ குமுத்வதி: ப்ரசோதயாத்||

ஸ்ரீ அஹல்யா தேவி..

ஓம் மஹா சக்தியைச வித்மஹே
கெளதம பத்னியைச தீமஹி
தந்நோ அஹல்யா: ப்ரசோதயாத்||

ஸ்ரீ ரேணுகா தேவி..

ஓம் ஆதி சக்தியைச வித்மஹே
ஜமதக்னி பத்னியைச தீமஹி
தந்நோ ரேணுகா: ப்ரசோதயாத்||

ஸ்ரீ அருந்ததி தேவி..

ஓம் ஞானாத்மிகாயை வித்மஹே
வசிஷ்ட பத்னியைச தீமஹி
தந்நோ அருந்ததி: ப்ரசோதயாத்||




ஸப்த ரிஷிகளுக்கும் உரிய 

காயத்ரி மந்திரங்கள்...



காஸ்யபர்..


ஓம் சர்வ சாஸ்த்ரார்த்தாய வித்மஹே
ஆத்ம யோகாய தீமஹி
தந்நோ காஸ்யப: ப்ரசோதயாத்||

அத்ரி..

ஓம் சத்கர்மபலதாய வித்மஹே
சதாக்நிஹோத்ராய தீமஹி
தந்நோ அத்ரி: ப்ரசோதயாத்||

பரத்வாஜர்..

ஓம் தபோரூடாய வித்மஹே
சத்ய தர்மாய தீமஹி
தந்நோ பரத்வாஜ: ப்ரசோதயாத்||

விஸ்வாமித்ரர்..

ஓம் தநுர்தராய வித்மஹே
ஜடாஜுடாய தீமஹி
தந்நோ விஸ்வாமித்ர: ப்ரசோதயாத்||

கெளதமர்..

ஓம் மஹா யோகாய வித்மஹே
சர்வபாவநாய தீமஹி
தந்நோ கெளதம: ப்ரசோதயாத்||

ஜமதக்னி..

ஓம் ரிஷிஸ் ரேஷ்டாய வித்மஹே
அக்ஷசூத்ராய தீமஹி
தந்நோ ஜமதக்னி: ப்ரசோதயாத்||

வசிஷ்டர்..

ஓம் வேதாந்தகாய வித்மஹே
ப்ரஹ்ம சுதாய தீமஹி
தந்நோ வசிஷ்ட: ப்ரசோதயாத்||



நவ துர்கைகளுக்கு உரிய காயத்ரி மந்திரங்கள்...


வனதுர்கா..

ஓம் உத்திஷ்ட புருஷ்யைச வித்மஹே
மகாசக்த்யைச தீமஹி
தந்நோ வனதுர்கா: ப்ரசோதயாத்||

ஆஸுரி துர்கா..

ஓம் மகா காம்பீர்யைச வித்மஹே
சத்ரு பக்ஷிண்யைச தீமஹி
தந்நோ ஆஸுரிதுர்கா: ப்ரசோதயாத்||

திருஷ்டி துர்கா..

ஓம் ஹ்ரீம் தும் திருஷ்டிநாசின்யைச வித்மஹே
தும் ஹ்ரீம் ஓம் துஷ்ட நாஷின்யைச தீமஹி
தந்நோ திருஷ்டிதுர்கா: ப்ரசோதயாத்||

ஜாதவேதோ துர்கா..

ஓம் மஹாதேவ்யைச வித்மஹே
வந்நி ரூபாயைச தீமஹி
தந்நோ ஜாதவேதோ: ப்ரசோதயாத்||

ஜய துர்கா..

ஓம் ஹ்ரீம் லவநாராயைச வித்மஹே
தும் ஹ்ரீம் ஓம் பயநாசின்யைச தீமஹி
தந்நோ ஜயதுர்கா: ப்ரசோதயாத்||

சந்தான துர்கா..

ஓம் காத்யாயண்யைச வித்மஹே
கர்பரக்ஷிண்யைச தீமஹி
தந்நோ சந்தானதுர்கா: ப்ரசோதயாத்||

சபரி துர்கா..

ஓம் காத்யாயண்யைச வித்மஹே
கால ராத்ர்யைச தீமஹி
தந்நோ சபரி துர்கா ப்ரசோதயாத்||

சாந்தி துர்கா..

ஓம் மஹாதேவ்யைச வித்மஹே
ஜயவரதாயைச தீமஹி
தந்நோ சாந்திதுர்கா: ப்ரசோதயாத்||

சூலினி துர்கா..

ஓம் ஹ்ரீம் தும் ஜ்வாலாமாலினி வித்மஹே
தும் ஹ்ரீம் ஓம் மஹாசூலினிச தீமஹி
ஓம் ஹ்ரீம் தும் தந்நோ துர்கா: ப்ரசோதயாத்||



ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம்


ஸூமநஸ வந்தித ஸூந்தரி மாதவி
சந்த்ர சகோதரி ஹேமமயே
முநிகண மண்டித மோக்ஷ ப்ரதாயினி
மஞ்சுள பாக்ஷிணி வேதநுதே
பங்கஜ வாஸினி தேவஸூ பூஜித
ஸத்குண வர்ஷினி சாந்தியுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
ஆதிலெக்ஷ்மி ஜெய பாலயமாம்.

ஐகலி கல்மஷ நாசினி காமினி
வைதிக ரூபிணி வேதமயே
க்ஷீர சமுத்பவ மங்கள ரூபிணி
மந்த்ர நிவாஸினி மந்த்ரநுதே
மங்கள தாயிணி அம்புஜ வாஷினி
தேவ கணார்ச்சித பாதயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
தான்யலக்ஷ்மி ஜெய பாலயமாம்.

ஜயவர வர்னினி வைஷ்ணவி பார்கவி
மந்த்ர ஸ்வரூபிணி மந்த்ரமயே
ஸூரகண பூஜிய சீக்ர பலப்ரத
ஞான விகாஸினி சாஸ்த்ர நுதே
பவபய ஹாரிணி பாப விமோசனி
சாது ஜநாச்ரித பாதயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
தைர்யலக்ஷ்மி ஜெய பாலயமாம்.

ஜய ஜய துர்கதி நாசினி காமினி
சர்வ பலப்ரத சாஸ்த்ரமயே
ரதகஜ துர்க பதாதி சமானுத
பரிஜன மண்டித லோகநுதே
ஹரிஹர ப்ரம்ம ஸூபூஜித சேவித
தாப நிவாரிணி பாதயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
ஸ்ரீ கஜலக்ஷ்மி பாலயமாம்.

அயிகக வாஹினி மோஹினி சக்ரிணி
ராக விவர்த்தினி ஞானமயே
குணகண வாரிதி லோக ஹிதைஷினி
ஸப்த ஸ்வர வர கானனுதே
சகல ஸூராஸூர தேவ முநீஸ்வர
மாநவ வந்தித பாத யுதே
ஜெய ஜெய ஹே மது ஸூதன காமினி
சந்தான் லக்ஷ்மி பாலயமாம்.

ஜய கமலாசனி சத்கதி தாயினி
ஞான விகாஸினி கானமயே
அனுதின மர்ச்சித குங்கும தூசர
பூஷித வாஸித வாத்ய நுதே
கனகதாரா ஸ்துதி வைபவ வந்தித
சங்கர தேசித மான்யபதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
விஜயலக்ஷ்மி ஜெய பாலயமாம்.

ப்ரணத ஸூரேஸ்வரி பாரதி பார்கவி
சோக விநாசினி ரத்னமயே
மணிமய பூக்ஷித கர்ண விபூஷண
சாந்தி ஸமாவ்ருத ஹாஸ்யமுகே
நவநிதி தாயினி கலிமல ஹாரிணி
காமித பலப்ரத ஹஸ்தயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
வித்யாலக்ஷ்மி பாலயமாம்.

திமிதிமி திந்திமி திந்திமி திந்திமி
துந்துபி நாத ஸூ பூர்ண மயே
கும கும குங்கும் குங்கும் குங்கும்
சங்க நிநாத ஸூவாத் ய நுதே
வேத புராணே திஹாச ஸூ பூஜித
வைதிக மார்க ப்ரதச்ச யுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
ஸ்ரீ தனலக்ஷ்மி பாலயமாம்.

இதி ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம் சம்பூர்ணம்.




ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்திரம்


கமலாகுச சூசுக குங்குமதோ
நியதாருணி தாதுல நீலதனோ
கமலாயத லோசன லோகபதே
விஜயீபவ வேங்கட சைலபதே.

ஸசதுர்முக ஷண்முக பஞ்ச முக
ப்ரமுகாகில தைவ தமௌளிமனே
சரணாகத வத்ஸல ஸாரநிதே
பரிபாலய மாம் வ்ருஷசைலபதே.

அதிவேலதயா தவ துர்விஷஹை:
அனுவேல க்ருதை ரபராதசதை:
பரிதம் த்வரிதம் வ்ருஷசைலபதே
பரயா க்ருபயா பரிபாஹி ஹரே

அதிவேங்கட சைல முதாரமதே
ஜனதாபி மதாதிக தானரதாத்
பரதேவதயா கதிதான் நிகமை:
கமலா தயிதான்ன பரம் கலயே.

கலவேணு ரவா வஸகோபவதூ
ஸதகோடி வ்ருதாத்ஸ்மர கோடிஸமாத்
ப்ரதிவல்ல விகாபி மதாத் ஸுகதாத்
வஸுதேவஸுதான் ந பரம் கலயே.

அபிராம குணாகர தாசரதே
ஜகதேக தனுர்த்தர தீரமதே
ரகுநாயக ராம ரமேச விபோ
வரதோ பவதேவ தயாஜலதே.

அவனீ தனயா கமனீயகரம்
ரஜனீகரசாரு முகாம்புருஹம்
ரஜனீ சரராஜ தமோமிஹிரம்
மஹனீய மஹம் ரகுராம மயே.

ஸூமுகம் ஸூஹ்ருதம் ஸுலபம் ஸுகதம்
ஸ்வனுஜஞ்ச ஸுகாய மமோக சரம்
அபஹாய ரகூத்வஹ மன்யமஹம்
ந கதஞ்சன கஞ்சன ஜாது பஜே.

வினா வேங்கடேசம் ந நாதோ ந நாதஸ்
ஸதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி.
ஹரே வேங்கடேச ப்ரஸீத ப்ரஸீத
ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச.

அஹம் தூரதஸ்தே பதாம் போஜ யுக்ம
ப்ரணாமேச்சயாகத்ய ஸேவாம் கரோமி
ஸக்ருத் ஸேவாய நித்ய ஸேவாபலம் த்வம்
ப்ரயச்ச ப்ரயச்ச ப்ரபோ வேங்கடேச.

அக்ஞானினா மயா தோஷான்
அஷேஸான் விஹிதான் ஹரே
க்ஷமஸ்வ த்வம் க்ஷமஸ்வ த்வம்
சேக்ஷசைல சிகாமணே.

ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்திரம் ஸம்பூர்ணம்.



ஸ்ரீ சிவ தாண்டவ  ஸ்தோத்திரம்


ஜடாடவீகலஜ்ஜலப்ரவாஹபாவிதஸ்தலே
கலேவலம்ப்ய லம்பிதாம் புஜங்கதுங்கமாலிகாம்.
டமட்டமட்டமட்டமன்னிநாதவட்டமர்வயம்
சகார சண்டதாண்டவம் தனோது ந: ஸிவ: ஸிவம்.

ஜடாகடாஹஸம்ப்ரமப்ரமன்னிலிம்பனிர்ஜரீ
விலோலவீசிவல்லரீவிராஜமானமூர்தனி.
தகத்தகத்தகஜ்வலல்லலாடபட்டபாவகே
கிஷோரசந்த்ரசேகரே ரதி: ப்ரதிக்ஷணம் மம.

தராதரேந்த்ர நந்தினீ விலாஸ பந்து பந்துர
ஸ்புரத்திகந்த ஸந்ததி ப்ரமோத மான மானஸே.
க்ருபா கடாக்ஷ தோரணீ நிருத்த துர்தராபதி
க்வசித் திகம்பரே மனோ வினோத மேது வஸ்துனி.

ஜடாபுஜங்க பிங்கலஸ்புரத்பணாமணிப்ரபா
கதம்ப குங்கும த்ரவ ப்ரலிப்த திக்வதூமுகே.
மதாந்த ஸிந்துர ஸ்புரத்வகுத்த ரீயமேதுரே
மநோ விநோதமத்புதம் பிபர்து பூதபர்தரி.

ஸஹஸ்ரலோசன ப்ரப்ருத்ய சேஷலேக சேகர
ப்ரஸூன தூலி தோரணி விதூஸராங்ரி க்ரபீடபூ:
புஜங்கராஜ மாலயா நிபத்தஜாட ஜூடக
ஸ்ரீயை சிராய ஜாயதாம் சகோர பந்துசேகர:

லலாட சத்வ ரஜ்வலத் தனஞ்சயஸ் புலிங்கபா
நீபீத பஞ்சஸாயகம் நமன்னிலிம்ப நாயகம்.
ஸுதாமயூக லேகயா விராஜமான சேகரம்
மஹாகபாலி ஸம்பதேசி ரோஜ டாலமஸ்து ந:

கரால பால பட்டிகா தகத் தகத் தகஜ்வலத்
தனஞ்சயாஹுதி க்ருத ப்ரசண்ட பஞ்ச ஸாயகே
தராதரேந்த்ர நந்தினீ குசாக்ர சித்ர பத்ரக
ப்ரகல்பனைக சில்பினி த்ரிலோசனே ரதிர்மம.

நவீன மேக மண்டலீ நிருத்த துர்தர ஸ்புரத்
குஹூனி ஷீதினீதம: ப்ரபந்த பத்த கந்தர:
நிலிம்ப நிர்ஜரீ தரஸ் தனோது க்ருத்தி ஸிந்துர:
கலாநிதான பந்துர: ஸ்ரீயம் ஜகத் துரந்தர:

ப்ரபுல்ல நீல பங்கஜ ப்ரபஞ்சகாலி மப்ரபா
வலம்பிகண்ட கந்தலீ ருசிப்ரபத்த கந்தரம்
ஸ்மரச்சிதம் புரச்சிதம் பவச்சிதம் மகச்சிதம்
கஜச்சிதாந்த கச்சிதம் தமந்தகச் சிதம் பஜே.

அகர்வ ஸர்வ மங்கலா கலா கதம்ப மஞ்சரி
ரஸப்ரவாஹமாதுரீ விஜ்ரும்பணாம தூவ்ரதம்.
ஸ்மராந்தகம் புராந்தகம் பவாந்தகம் மகாந்தகம்
கஜாந்த காந்த காந்தகம் தமந்தகாந்தகம் பஜே.

ஜயத்வதப்ரவிப்ரமப்ர மத்புஜங்கதுங்க மச்வஸ
த்விநிர்கமத்கம ஸ்புரத்கரால பாலஹவ்யவாட்.
திமித் திமித் திமித்வனன் ம்ருதங்க துங்க மங்கள
த்வனிக்ரம ப்ரவர்தித ப்ரசண்ட தாண்டவ: ஸிவ:

ஸ்ப்ருஷத்வி சித்ரதல்பயோர் புஜங்கமௌக்திகஸ்ரஜோர்
கரிஷ்டரத்னலோஷ்டயோ: ஸுஹ்ருத்விபக்ஷபக்ஷயோ:
த்ருணாரவிந்தசக்ஷுஷோ: ப்ரஜாமஹீமஹேந்த்ரயோ:
ஸமப்ரவ்ருத்திக: கதா ஸதாசிவம் பஜாம்யஹம்.

கதா நி்லிம்ப நிர்ஜரி நிகுஞ்சகோடரே வஸன்
விமுக்ததுர்மதி: ஸதா சிர: ஸ்தமஞ்ஜலிம் வஹன்
விலோல லோல லோசனோ லலாம பால லக்னக:
சிவேதி மந்த்ர முச்சரன் கதாஸுகீ பவாப்யஹம்.

இதம் ஹி நித்யமேவமுக்தமுத்தமோத்தமம் ஸ்தவம்
படன்ஸ்மரம்ப்ருவன்னரோ விஸுத்தி மேதி ஸந்ததம்
ஹரே குரௌ ஸுபக்திமாசு யாதி நான்யதா கதிம்
விமோஹனம் ஹி தேஹினாம் ஸுசங்கரஸ்ய ஸிந்தனம்.


ஸிவ மாநஸ பூஜா ஸ்தோத்ரம்


ரத்னை: கல்பிதம் - ஆஸநம் ஹிமஜலை: ஸ்நாநம் ச திவ்யாம்பரம்
நானாரத்ந: விபூஷிதம் ம்ருகமதாமோதாங்கிதம் சந்தநம்
ஜாதீ சம்பக பில்வபத்ர ரசிதம் புஷ்பம் ச தூபம் ததா
தீபம் தேவ தயாநிதே பஸுபதே ஹ்ருத்-கல்பிதம் க்ருஹ்யதாம்
ஸெளவர்ணே நவரத்ந கண்ட ரசிதே பாத்ரே க்ருதம் பாயஸம்
பக்ஷ்யம் பஞ்சவிதம் பயோததியுதம் ரம்பா பலம் பானகம்
ஸாகானாமயுதம் ஜலம் ருசிகரம் கற்பூர கண்ட உஜ்ஜ்வலம்
தாம்பூலம் மநஸா மயா விரசிதம் பக்த்யா ப்ரபோ ஸ்வீகுரு
சத்ரம் சாமரயோர்யுகம் வ்யஜனகம் சாதர்ஸகம் நிர்மலம்
வீணா பேரி ம்ருதங்க கோஹலகலா கீதம் ச ந்ருத்யம் ததா
ஸாஷ்டாங்கம் ப்ரணதி: ஸ்துதி: பஹுவிதா ஹ்யேதத் ஸமஸ்தம் மயா
ஸங்கல்பேன ஸமர்ப்பிதம் தவ விபோ பூஜாம் க்ருஹாண ப்ரபோ
ஆத்மா த்வம் கிரிஜா மதி: ஸஹசரா: ப்ராணா: ஸரீரம் க்ருஹம்
பூஜா தே விஷயோபபோக ரசனா நித்ரா ஸமாதி ஸ்திதி:
ஸஞ்சார: பதயோ: ப்ரதக்ஷிணவிதி: ஸ்தோத்ராணி ஸர்வா-கிரோ
யத்-யத் கர்ம கரோமி தத்-தத் அகிலம் ஸம்போ தவ ஆராதநம்
கரசரணக்ருதம் வாக்காயஜம் கர்மஜம் வா
ஸ்ரவண - நயநஜம் வா மானஸம் வாபராதம்
விஹிதம் - அவிஹிதம் வா ஸர்வமேதத் க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஸம்போ
ஸிவ மாநஸ பூஜா ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.



ஸ்ரீ சிவரக்ஷா ஸ்தோத்திரம்


ஓம் அஸ்ய ஸ்ரீ சிவரக்ஷா ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்யா

யாக்ஞாவல்க்ய ருஷி:
அனுஷ்டுப் சந்த:
ஸ்ரீ சதாசிவோ தேவதா
ஸ்ரீஸதாசிவ ப்ரீத்யர்த்தே
ஸ்ரீ சிவரக்ஷா ஸ்தோத்ர ஜபே விநியோக:

சரிதம் தேவ தேவஸ்ய மஹா தேவஸ்ய பாவனம்
அபாரம் பர்மோதரம் சதுர்வர்கஸ்ய ஜாதனம்

கௌரி விநாயகோ பேதம் பஞ்சவதக்த்ரம் த்ரிநேத்ரகம்
சிவம் த்யாத்வா தசபுஜம் சிவரக்ஷாம் படேந்நர:

கங்கா தரச்சிர; பாது பாலமர்த்தேந்து சேகர
நயனே மதனத்வம்ஸீ கர்ணௌ ஸர்ப்ப விபூஷண:

க்ராணம் பாது புராராதிர்முகம் பாது ஜகத்பதி:
ஜிஹ்வதாம் வாகீச்வர: பாது கந்தாரம் சசிகந்தர:

ஸ்ரீகண்ட: பாதுமே கண்டம் ஸ்கந்தௌ விச்வதுரந்தர
புஜௌ பூபார ஸம்ஹர்த்தா க்ரௌபாது பினாகத்ருத்

ஹ்ருதயம் சங்கர: பாது ஜடாம் கிரிஜாபதி:
நாபிம் ம்ருத்யுஞ்ஜய: பாது கடிம் வ்யாக்ராஜிநாம்பர:

ஸ்க்திநீ பாது தீநார்த்த: சரணாகத வத்ஸல
ஊரூ மஹேஸ்வர: பாது ஜானு நீ ஜகதீஸ்வர

ஜங்கே பாது ஜகத்கர்த்தா குல்பௌபாது கணாதிப:
சரணௌ கருணாஸிந்து: ஸர்வாங்கனி ஸாதாசிவ:

எதாம் சிவபலோபேதாம் ரக்ஷாம் யஸ்ஸுக்ருதீ படேத்
ஸ புக்த்வா ஸகலான் காமான் சிவஸாயுஜ்யமாப்னுயாத்

க்ரஹ பூத பிசாசாத்யாஸ் த்ரைலோக்ய விசரந்தி யே
தூராதாசு பாலாயந்தே சிவநாமாபி ரக்ஷணாத்.

அபயங்கர நாமேதம் கவசம் பார்வதீபதே:
பக்த்யா பிபர்த்திய: கண்டே தஸ்ய வச்யம் ஜகத்த்ரயம்.

இமாம் நாராயணன் ஸ்வப்னே சிவரக்ஷாம் யதாசிசத்
ப்ராதருத்தாய யோகீந்த்ரோ யக்ஞவல்கீய ஸ்ததாலிகத்.




இந்த ஸ்தோத்திரம் மிகவும் அபூர்வமானது. இதற்கு சிவ அபயங்க ஸ்தோத்திரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்த ஸ்தோத்திரத்தை யோகீஸ்வரர் யாக்ஞவல்க்யரின் கனவில் ஸ்ரீமந்நாராயணன் சொன்னதை காலையில் தன் சிஷ்யர்களின் மூலம் பலரும் பயனடையச் செய்தார்.

இந்த ஸ்தோத்திரத்தை சிவ ஆலயத்தில் சிவனுக்கும் அம்பாளுக்கும் எதிரில் நின்று கொண்டு பாராயணம் செய்பவர்களுக்கும் தினம் மாலையில் தங்களுடைய வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து இதனைப் பாராயணம் செய்பவர்கள் தனக்கு வேண்டியதை அடைவார்கள். பூத, பிசாசங்கள் நெருங்காது. நவக்ரஹங்களின் பாதகநிலை விலகி எல்லா வசியமும் ஏற்பட்டு கடைசியில் சிவ சாயுஜ்யம் அடைவார்கள் என்றும் இதனைத் தகட்டில் எழுதி கழுத்தில் கட்டிக் கொள்பவனுக்கு மூன்று உலகமும் வசமாகும் என்று ப்ருஹத் ஸ்தோத்ர ரத்னாகரம் என்ற நூலில் விரிவாக கூறப்பட்டு இருக்கிறது.

எல்லா நன்மைகளைப் பெற்று சிவோஹ நிலையை அடைய ஸ்ரீ சிவரக்ஷா ஸ்தோத்திரம் பாராயணம் பண்ணி சிவ அருளைப் பிரார்த்திப்போம்.

'ஓம் தத்ஸத்"



ஸ்ரீ ஸரஸ்வதி சதநாம 

அஷ்டோத்ரம்

ஸரஸ்வதீ மஹாபத்ரா மஹாமாயா வரப்ரதா
ஸ்ரீப்ரதா பத்மநிலயா பத்மாக்ஷி பத்மவக்த்ரகா
ஸிவாநுஜா புஸ்தகப்ருத் ஜ்ஞாநமுத்ரா ரமாபரா
காமரூபா மஹாவித்யா மஹாபாதக நாஸிநீ.

மஹாஸ்ரயா மாலிநீ ச மஹாபோகா மஹாபுஜா
மஹாபாகா மஹோத்ஸாஹா திவ்யாங்கா ஸுரவந்திதா
மஹாகாளீ மஹாபாஸா மஹாகாரா மஹாங்குஸா
பீதாச விமலா விஸ்வா வித்யுந்மாலா ச வைஷ்ணவி.

சந்த்ரிகா சந்த்ரவதநா சந்த்ரலேகா விபூஷிதா
ஸாவித்ரீ ஸுரஸாதேவீ திவ்யாலங்கார பூஷிதா
வாக்தேவி வஸுதா தீவ்ரா மஹாபத்ரா மஹாபலா
போகதா பாரதீ பாமா கோவிந்தா கோமதீ ஸிவா.

ஜடிலா விந்த்யவாஸா ச விந்த்யாசல விராஜிதா
சண்டிகா வைஷ்ணவி ப்ராஹ்மீ ப்ரஹ்மஜ்ஞாநைக ஸாதநா
ஸௌதாமிநீ ஸுதா மூர்த்தி ஸுபத்ரா ஸுரபூஜிதா
ஸுவாசிநீ ஸுநாஸாச விநித்ரா பத்மலோசநா.

வித்யாரூபா விஸாலாக்ஷீ ப்ரஹ்மஜாயா மஹாபலா
த்ரயீமூர்த்திஸ் த்ரிகாலஜ்ஞா த்ரிகுணா ஸாஸ்த்ரரூபிணீ
ஸும்பாஸுர ப்ரமதிநீ ஸுபதாச ஸ்வராத்மிகா
ரக்தபீஜநிஹந்த்ரீச சாமுண்டா சாம்பிகா ததா.

முண்டகாய ப்ரஹரணா தூம்ரலோசந மர்தநா
ஸர்வதேவாஸ்துதா ஸௌம்யா ஸுராஸுர நமஸ்க்ருதா
காளராத்ரீ கலாதாரா ரூபஸௌபாக்ய தாயீநீ
வாக்தேவீ ச வராரோஹா வாராஹீ வாரிஜாஸநா.

சித்ராம்பரா சித்ரகந்தா சித்ரமால்ய விபூஷிதா
காந்தா காமப்ரதா வந்த்யா வித்யாதர ஸுபூஜிதா
ஸ்வேதாநநா நீலபுஜா சதுர்வர்க பலப்ரதா
சதுராநந ஸாம்ராஜ்யா ரக்தமத்யா நிரஞ்ஜநா.

ஹம்ஸாஸநா நீலஜங்க்கா ப்ரஹ்மவிஷ்ணு ஸிவாத்மிகா
ஏவம் ஸரஸ்வதீ தேவ்யா நாம்நாமஷ்டோத்தரம் சதம்.

இதி ஸ்ரீ ஸரஸ்வதி சதநாம அஷ்டோத்ரம் சம்பூர்ணம்.




துக்க நிவாரண அஷ்டகம்


மங்கள ரூபிணி மதி அணி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீங்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே
கங்கண பாணியன் களிமுகம் கொண்டநல் கற்பகக் காமினியே
ஜெயஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி. 

கான் உறுமலர் எனக் கதிர் ஒளிகாட்டிக் காத்திட வந்திடுவாள்
தான் உறு தவஒளி தார்ஒளி மதிஒளி தாங்கியே வீசிடுவாள்
மான் ஊறு லிழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
எம்குலம் தழைத்திட எழில்வடிவுடனே எழுந்தநல் துர்க்கையளே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

தணதண தந்தண தவில் ஒலி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்
கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்
பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே
கொஞ்சிடும் குமரனைக் குணம்மிகு வேழனைக் கொடுத்த நல்குமரியளே
சங்கடம் தீர்த்திடச் சமர் அது செய்தநல் சக்தி எனும் மாயே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

எண்ணியபடி நீ அருளிட வருவாய் எம்குல தேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி அதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுபாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

ஜெயஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீ தேவி
ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீ பரமேஸ்வரி ஜெய ஜெயஸ்ரீதேவி
ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெயஸ்ரீதேவி
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

துக்க நிவாரண அஷ்டகம் முற்றும்.....



லிங்காஷ்டகம் 

(சமஸ்கிருதத்தில்)


ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஸித ஸோபித லிங்கம்
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்


தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம்
ராவண தர்ப வினாஷன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
சித்த சுராசுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம்
தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப சதார்சித லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

லிங்காஷ்டகம் இதம் புண்யம்
யே படேத் சிவ சன்னிதௌ
சிவலோகம் அவாப்நோதி
சிவே ந ஸஹமோததே..



27 நட்சத்திரங்களுக்கும் உரிய 

காயத்திரி மந்திரங்ள்


அசுவனி"ஓம் ஸ்வேத வர்ணாயை வித்மஹே சுதாகராயை தீமஹி|
தந்நோ அச்வநௌ: ப்ரசோதயாத்||"

பரணி"ஓம் க்ருஷ்ணவர்ணாயை வித்மஹே தண்டதராயை தீமஹி|
தந்நோ பரணி: ப்ரசோதயாத்||"

கிருத்திகா"ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி|
தந்நோ க்ருத்திகா: ப்ரசோதயாத்||"

ரோகிணி"ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி|
தந்நோ ரோஹினி: ப்ரசோதயாத்||"

மிருகசீர்ஷம்"ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி|
ம்ருகசீர்ஷா: ப்ரசோதயாத்||"

திருவாதிரை"ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி|
தந்நோ ஆர்த்ரா: ப்ரசோதயாத்||"

புனர்பூசம்"ஓம் ப்ராஜாவ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய தீமஹி|
தந்நோ புனர்வஸு: ப்ரசோதயாத்

பூசம்"ஓம் ப்ரம்மவர்ச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி|
தந்நோ புஷ்ய: ப்ரசோதயாத்||"

ஆயில்யம்
"ஓம் ஸர்பராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி|
தந்நோ ஆச்லேஷ: ப்ரசோதயாத்||"

மகம்"ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி|
தந்நோ மக: ப்ரசோதயாத்||"

பூரம்"ஓம் அரியம்நாய வித்மஹே பசுதேஹாய தீமஹி|
தந்நோ பூர்வபால்குநீ: ப்ரசோதயாத்||"

உத்தரம்"ஓம் மஹாபாகாயை வித்மஹே மஹாச்ரேஷ்டாயை தீமஹி|
தந்நோ உத்ரபால்குநீ: ப்ரசோதயாத்||"

அஸ்தம்"ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே ப்ரக்ருப்ணீதாயை தீமஹி|
தந்நோ ஹஜ்தா: ப்ரசோதயாத்||"

சித்திரை"ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே ப்ரஜாரூபாயை தீமஹி|
தந்நோ சைத்ரா: ப்ரசோதயாத்||"

சுவாதி"ஓம் காமசாராயை வித்மஹே மஹாநிஷ்டாயை தீமஹி|
தந்நோ சுவாதி: ப்ரசோதயாத்||"

விசாகம்"ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி|
தந்நோ விசாகா: ப்ரசோதயாத்||"

அனுஷம்"ஓம் மிந்த்ரதேயாயை வித்மஹே மஹாமித்ராய தீமஹி|
தந்நோ அனுராதா: ப்ரசோதயாத்||"

கேட்டை"ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி|
தந்நோ ஜ்யேஷ்டா: ப்ரசோதயாத்||"

மூலம்ஓம் ப்ரஜாபதிபாயை வித்மஹே மஹா ப்ராஜாயை தீமஹி|
தந்நோ மூலாப்: ப்ரசோதயாத்||"

பூராடம்

"ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே மஹாபிஜிதாயை தீமஹி|
தந்நோ பூர்வாஷாடா: ப்ரசோதயாத்||"

உத்திராடம்"ஓம் விஸ்வேதேவாய வித்மஹே மஹா ஷாடாய தீமஹி|
தந்நோ உத்ராஷாடா: ப்ரசோதயாத்||"

திருவோணம்

"ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே புண்யஸ்லோகாய தீமஹி|
தந்நோ ச்ரோணா: ப்ரசோதயாத்||"

அவிட்டம்

"ஓம் அக்ர நாதாய வித்மஹே வசூபரீதாய தீமஹி|
தந்நோ ச்ரவிஷ்டா: ப்ரசோதயாத்||"

சதயம்

"ஓம் பேஷஜயா வித்மஹே வருண தேஹா தீமஹி|
தந்நோ சதபிஷக்: ப்ரசோதயாத்||"


பூரட்டாதி

"ஓம் தேஜஸ்கராய வித்மஹே அஜஏகபாதாய தீமஹி|
தந்நோ பூர்வப்ரோஷ்டபத: ப்ரசோதயாத்||"

உத்திரட்டாதி"ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே ப்ரதிஷ்டாபநாய தீமஹி|
தந்நோ உத்ரப்ப்ரோஷ்டபத: ப்ரசோதயாத்||"

ரேவதி"ஓம் விச்வரூபாய வித்மஹே பூஷ்ண தேஹாய தீமஹி|
தந்நோ ரைய்வதி: ப்ரசோதயாத்||"
இந்த நட்சத்திரங்களுக்குரிய காயத்திரி மந்திரங்களைக் கொண்டு தினமும் என்ன நட்சத்திரம் இருக்கின்றதோ அந்த நட்சத்திரத்திற்குரிய வேளையில் அந்த நட்சத்திரத்திற்குரிய காயத்திரி மந்திரத்தை செபித்துவருவது சிறந்த பலனை அன்றைய தினத்தில் கொடுக்கும் என்பது ஐதீகம்.


பயம் போக்கும் பைரவர்.!

கால பைரவர்

பைரவரை வழிபட்டால் பிரம்மகத்தி தோஷம் நீங்கும், எம பயம் இருக்காது. திருமண தடைகள் நீங்கும், அத்துடன் பைரவர் சனிஸ்வரனின் ஆசிரியராவார் அதனால் இவரை வணங்குவதால் சனியின் தொல்லைகள் நீங்கும். எதிரிகள் அழிவர், பில்லி, சூனியம், அகலும். வழக்குகளில் வெற்றிகள் கிட்டும்.

கார்த்திகை மாதத்தில் வரும் வளர்பிறை அஷ்டமி, மற்றும் தேய்பிறை அஷ்டமியும் பைரவருக்கு உகந்த நாளாகும். அன்றைய தினத்தில் பைரவருக்கு அர்த்தசாம பூஜை மிக விசேஷமானதாகும்.

காசியின் காவல் தெய்வமான கால பைரவர் அவதரித்ததது கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி நாளிலேயே ஆகும்.


சூலமும் , உடுக்கையும், மழுவும், பாசக்கயிறும் கைகளில் ஏந்தியபடி காட்சி தரும் கால பைரவரின் வாகனம் நாய்.
பைரவ காயத்ரி மந்திரம்...

”ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே 
ஸ்வாந வாஹாய தீமஹி 
தந்நோ பைரவ; ப்ரசோதயாத்”


மேலும் சில பைரவ அம்சங்களாவன...

அன்ன வாகனத்துடன் காட்சிதருபவர்...
அசிதாங்க பைரவர். 

காளை மாட்டு வாகனத்துடன் காட்சிதருபவர்...
உரு பைரவர்.

மயில் வாகனத்துடன் காட்சிதருபவர்...
சண்ட பைரவர்.

கழுகு வாகனத்துடன் காட்சிதருபவர்...
குரோத பைரவர்.

குதிரை வாகனத்துடன் காட்சிதருபவர்...
உன்மத்த பைரவர்.

யானை வாகனத்துடன் காட்சிதருபவர்...
கபால பைரவர்.

சிம்ம வாகனத்துடன் காட்சிதருபவர்...
பீஷண பைரவர்.



கன்னிகாதானம் செய்யும் 

மந்திரம்...


"ஐயம் ஷீதா ஷுதா சக தர்ம சரீதவ
ப்ரதீச்ச சைனாம் பத்ரம்தே பாணிம்
க்ருஹ்ஷீவ பாணினா பதிவ்ரதா
மகா பாகா சாயா இவானுகதா ஷதா" 


ராமர்-சீதை திருமணத்தின் பொது சொல்லப்பட்ட மந்திரம் இது. இந்த மந்திரத்தை சொல்லித்தான் ஜனகர் சீதையை ராமரிடம் ஒப்படைத்தாரென வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதோ என் மகள் சீதை... ஸ்ரீ ராம பிரானே.. நீ செல்லும் தர்ம வழியில் இவள் உன்னுடன் துணையாக வருவாள் கையை பற்றி பெற்றுக் கொள்வாயாக, மங்களமே சம்பவிக்கும், பதிவிரதையாக இருந்து உன் நிழல் போல என்றும் உன்னை பற்றி நிற்பாள், எப்போதும் பிரியாள்" என்பதே இதன் பொருள்.

வட இந்தியாவில் நடக்கும் திருமணங்களில் பெண்ணை கன்னிகாதானம் செய்யும் சடங்கின் போது இன்றும் இந்த மந்திரம் சொல்லப் படுகிறது...


துளசீ கவசம்

துளசீ ஸ்ரீ மகாதேவி நம: பங்கஜதாரிணி
சிரோ மே துளசீ பாது பாலம் பாது யஸஸ்வினி

த்ருஷெள மே பத்மநயனா ஸ்ரீசகீ ச்ரவணே மம
க்ராணம் பாது சுகந்தா மே முகம் ச சுமுகீ மம

ஜிஹ்வாமே பாது சுபதா கண்டம் வித்யா மயீ மம
ஸ்கந்தௌ கல்ஹாரிணி பாது ஹ்ருதயம் விஹ்ணுவல்லபா

புண்யதா மே பாது மத்யாம் நாபிம் ஸெளபாக்யதாயினி
கடிம் குண்டலினி பாது ஊரு நாரதவந்திதா

ஜனனீ ஜானுனீ பாது ஜங்கே சகலவந்திதா
நாராயணப்ரியா பாதௌ ஸர்வாங்கம் சர்வரக்ஷணீ

சங்கடே விஷமே துர்கே பயே வாதே மஹாஹவே
நித்யம் ஹி சந்த்யயோ பாது துளசீ ஸர்வத ஸ்தா

இதீதம் பரமம் குஹ்யம் துளஸ்யா கவசாமிருதம்
மர்த்யாநாம மிருதார்த்தாய பீதாநாம் அபயாயச:

மோக்ஷாய சமுமுக்ஷீணாம் த்யாயினாம் தியான யோக க்ருத்
வஸ்ய வஸ்ய காமானாம் வித்யாயை வேத வாதினாம்.

த்ரவீணாய தரித்ராணாம் பாபினாம் பாப சாந்தயே
அன்னாய க்ஷீதிதானஞ்ச ஸ்வர்காய ஸ்வர்க்க மிச்சதாம்.

பஸவ்யம் பஸுகாமானாம் புத்ரதம்புத்ர காங்க்ஷிணாம்
ராஜ்யாய ப்ரஷ்டா ராஜ்யானாம் மஸாந் தானாஞ்ச ஸாந்தமே.

பக்த்யர்த்தம் விஷ்ணுபக்தானாம் விஷ்ணௌ ஸர்வாந்த ராத்மநி
ஜாப்யம் த்ரிவர்க்க ஸித்யர்த்தம் க்ருஹஸ்தேன விசேஷத:

உத்யம் தம்சூர்ய கிரணமுபஸ்த்தாய கிருதாஞ்சலி:
துலஸிகாந நேதிஷ்டான் ஆஸினோவா ஜபேதி தம்.

ஸர்வான் காமான் அவாப்னோதி ததைவ மம ஸந்நிதம்
மமப்ரியகரம் நித்யம் ஹரிபக்தி விவர்தனம்.

யாஸ்யான் ம்ருதப்ரஜா நாரி தஸ்யா அங்கம் ப்ரமார்ஜயேத்
ஸபுத்ரம் லபதே தீர்க்க ஜீவினம் சாப்ய ரோகிணம்.

வந்த்யாய மார்ஜயே தங்கம் குஸைர் மந்த்ரேண ஸாதக:
ஸாபி ஸம்வத்சரே தேவ கர்ப்பம் தத்தே மனோஹரம்.

அஸ்வத்தே ராஜவஸ்யார்த்தி ஜலேதக்னேஸ்ஸுருபபர்க:
பலாஸமூலே வித்யார்த்தி தே ஜோர்த்தியமு கோரவே.

கன்யார்த்தி சண்டிகா கேஹே ஸத்ரு ஹத்யை க்ருஹேமம:
ஷ்ரீகாமோ விஷ்ணு கேஹேச உத்யானே ஸ்திரீ வஸாபேத்.

கிமத்ர பஹுநோக்தேன ஸருணுஸைன் யேஸதத்வத:
யம்யம் காம மபித்யாயே தத்தம் ப்ராப் னோத்ய ஸம்ஸயம்.

மமகேஹ கதஸ்த்வம்து த்ராகஸ்ய வதேச்சயா
ஜபன் ஸ்தோத்ரஞ்ச கவசம் துலஸீகத மானஸ:

மண்டலாத் தாரகம் ஹமதா
பிஷ்யசி ந ஸம்ஸய:

துளசீகவசம் சம்பூர்ணம்..


மஹாவிஷ்ணு சுலோகங்கள்


சாந்தாகாரம் புஜக சயனம்
பத்மநாபம் ஸுரேஸம்
விஸ்வாதாரம் ககன ஸத்ருஸம்
மேக வர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மி காந்தம் கமல நயனம்
யோகிஹ்ருத் த்யான கம்யம்
வந்தே விஷ்ணும் பவபயஹரம்
சர்வ லோகைகநாதம்.


காயேந வாசா மநஸேந்த்ரியைர்வா
புத்யாத்மநா வா ப்ரக்ருதே:
ஸ்வபாவா கரோமி யத்யத்
ஸகலம் பரஸ்மை
நாராயணாயேதி ஸமர்பயாமி.


சோடச லட்சுமி சுலோகங்கள்


1, தனலட்சுமி..
யாதேவீ ஸர்வ பூதேஷு
புஷ்டி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

2, தான்யலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
சஷீதா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

3, வித்யாலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

4, வீரலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
த்ரூதி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

5, ஸெளபாக்யலட்சுமி..

யாதேவீ ஸர்வபூதேஷு
துஷ்டி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

6, ஸந்தானலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
மாத்ரு ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

7, காருண்யலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
தயா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

8, மஹாலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
மஹா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

9, சாந்திலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
சாந்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

10, கீர்த்திலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
கீர்த்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

11, சாயாலட்சுமி..


யாதேவீ ஸர்வ பூதேஷு
ச்சாயா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

12, ஆரோக்கியலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
காந்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

13, த்ருஷ்ணாலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
த்ருஷ்ணா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

14, சாந்தலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
ஷாந்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

15, விஜயலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
விஜய ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

16, சக்திலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
சக்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:



நவக்கிரக சுலோகங்கள்


சூரியன்..

ஜபா குஸும ஸங்காசம்
காச்ய பேயம் மஹாத்யுதிம்|
தமோரிம் ஸர்வ பாபக்நம்
ப்ரணதோஸ்மிதிவாகரம்||

சந்திரன்..

ததிசங்க துஷாராபம்
க்ஷிரோ தார்ணவ ஸம்பவம்|
நமாமி சசினம் ஸோமம்
சம்போர் மகுட பூஷணம்||

செவ்வாய்..

தரணீ கர்ப்ப ஸம்பூதம்
வித்யுத்காந்தி ஸமப்ரபம்|
குமாரம் சக்திஹஸ்தம்ச
மங்களம் ப்ரணமாம்யஹம்||

புதன்..

ப்ரியங்கு கலிகாச்யாமம்
ரூபேணாப்ரதிமம் புதம்|
ஸெளம்யம் ஸெளம்ய குணோ
பேதம் தம்புதம் ப்ரணமாம்யஹம்||

குரு..

தேவா நாஞ்ச ரிஷீணாஞ்ச
குரூம் காஞ்சன ஸந்நிபம்|
பக்தி பூதம் த்ரிலோகேஸம்
தம் நமாமி ப்ருஹஸ்பதிம்||

சுக்ரன்..
ஹிமகுந்த ம்ரூணா லாபம்
தைத்யா நாம் பரமம்குரும்|
ஸர்வ சாருஞூதரப்ரவக்தாரம்
பார்க்கவம் ப்ரணமாம்யஹம்||

சனி..

நீலாஞ்ஜன ஸமாபாஸம்
ரவிபுத்ரம யமாக்ரஜம்
சாயா மார் தாண்டஸம்பூதம்
தம் நமாமி சனைச்சரம்||

ராகு..
அர்த்தகாயம் மஹாவீர்யம்
சந்திராதித்ய விமர்தனம்|
ஸிம்ஹிகா கர்பஸம்பூதம்
தம்ராஹும்ப்ரணமாம்யஹம்||

கேது..
பலாஷ புஷ்ப ஸங்காஷம்
தாரகா க்ரஹ மஸ்தகம்|
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம்யஹம்||



தஷிணாமூர்த்தி வழிபாடு


தென்முகக் கடவுளாம் தஷிணாமூர்த்தி, சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகியோருக்கு உபதேசம் செய்ய எழுந்தருளிய குருமூர்த்தமாகும்.

அவர் தம் சுட்டு விரலைப் பெருவிரலோடு சேர்த்து மற்ற மூன்று விரல்களையும் அகலவிட்டுக் காட்டும் சின்முத்திரையால் உயிர்கள் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றினையும் அகற்றிக் கடவுளை அடைதல் வேண்டும் என உபதேசிக்கிறார்.

இந்தச் சின்முத்ரை சாதக சின்முத்ரை, சாத்ய சின்முத்ரை, போதக சின்முத்ரை என்று முத்திறப்படும்.

ஸாதக சின்முத்ரா என்பது பெருவிரல் அடியில் ஆள்காட்டி விரல் நுனியில் பொருந்துவது.

ஸாத்ய சின்முத்ரை என்பது பெருவிரல் மத்தியில் ஆள்காட்டி விரல் நுனியில் பொருந்துவது.

போதக சின்முத்ரை என்பது பெருவிரல் நுனியில் ஆள்காட்டி விரல் நுனியில் பொருத்திக் கையை உயர்த்திக் காட்டுவதே இந்தப் போதக சின்முத்ரை எனப்படும்.

ஆதலால் கோவில்களில் தஷிணாமூர்த்தி சந்நிதியில் நாம் இறைவனைக் குருவாய்ப் பாவித்து வணங்க வேண்டும். அவ்வாறு வணங்கும் போது கீழ்வரும் சுலோகங்களைச் சொல்லி வழிபடலாம்..


"அக்ஞான திமிராந்தஸ்ய ஞானாஞ்ஜன சலாகயா
சஷுருன்மீலிதம் யேன தஸ்மை ஸ்ரீ குரவே நம:"

"குரவே ஸர்வலோகானாம் பிஷஜே பவரோகினாம்
நிதயே சர்வவித்யானாம் தஷிணாமூர்த்தயே நம:"

தஷிணாமூர்த்தி காயத்ரி..


"ஓம் தஷிணாஸ்யாய வித்மஹே த்யானரூபாய தீமஹி
தந்நோ போத ப்ரசோதயாத்||"

No comments:

Post a Comment