Saturday, November 15, 2014

பித்ரு தோஷம் போக்கும் கால பைரவர்



ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதிபைரவருக்கு உகந்த நாள். அந்த வகையில் ஒவ்வொரு அஷ்டமி திதிக்கும் ஒரு பெயர் உண்டு.

இதில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி ருத்ராஷ்டமி என்றும் கால பைரவாஷ்டமி என்றும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச்சந்நிதியில் காலபைரவர் எழுந்தருளி இருப்பார்.

சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு. சிவபெருமான் வீரச்செயல்களை செய்யும் காலங்களில் ஏற்கும் திருவுருவங்களை பைரவர் திருக்கோலம் என்று புராணம் சொல்லும். 

காலமே உருவான பைரவரின் திருவுருவத்தில் பன்னிரண்டு ராசிகளுமே அடக்கமாகியுள்ளன. தலையில் மேஷ ராசியும், வாய் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப்பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் மகரமும், தொடையில் தனுசும், முழுந்தாளில் மகரமும்,காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன. 

கால பைரவர் பாம்பைப் பூணுலாக கொண்டு, சந்திரனைசிரசில்வைத்து,சூலம்,மழு,பாசம்தண்டம்ஏந்திகாட்சிதருவார்.காசிமாநகரில்காவல்தெய்வமாகவும்காக்கும்கடவுளாகவும்காலபைரவர்திகழ்கிறார்.காசியில் பைரவருக்கு வழிபாடுகள் முடிந்த பிறகு தான் காசிவிஸ்வநாதருக்கு வழிபாடுகள் நடை
பெறும் வழக்கம் உள்ளது. 

காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டுஇறுதியாககாலபைரவரையும்வழிபட்டால் தான் காசி யாத்திரை செய்ததன்முழுப் பலனும் கிட்டும். கால பைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது சிறப்பாக கருதப்படுகிறது. 

ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்தபின், புனுகு சாந்நி,எலுமிச்சம் பழ மாலை அணிவித்து, 
எள்கலத்தசாதமும் இனிப்புபண்டங்களும்சமர்பித்து முன்னோர்களை நினைத்து  பிதுர்  பூஜைக்காக மந்திரங்களைச் சொல்லி அர்ச்சித்து வழிபட்டால் பிதுர் தோஷம் நீங்கும். அன்று அன்னதானம் செய்வது நல்லது.

No comments:

Post a Comment